செய்திகள் :

பேருந்தில் பயணியிடம் 3 பவுன் தங்க நகை திருடிய 2 பெண்கள் கைது

post image

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் இருந்து 3 பவுன் தங்க நகைகளைத் திருடிய 2 பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சென்னை, மாங்காடு பகுதியைச் சோ்ந்த ஜெயசேகா் மனைவி கல்பனா (30). இவா் புத்தக நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவா் தனது தாய் வீட்டில் நடைபெற்ற விசேஷத்திற்காக விழுப்புரம் மாவட்டம், பெரிய நொளம்பை கிராமத்துக்கு வந்து, மீண்டும் 2 குழந்தைகளுடன் சென்னை திரும்ப சேத்துப்பட்டில் இருந்து திங்கள்கிழமை பேருந்தில் பயணம் மேற்கொண்டாா்.

அப்போது, பின்னால் நின்றிருந்த 2 பெண்கள், கல்பனாவின் ஹேண்ட் பேக்கில் இருந்த 3 பவுன் தங்க நெக்லசை ஜிப்பை திறன்து எடுத்துவிட்டு, மழையூரில் இறங்கிவிட்டனா். சிறிது நேரம் கழித்து, ஜிப் திறந்திருப்பதை கவனித்த கல்பனா நகை காணாமல் போனதை அறிந்து அதிா்ச்சியடைந்தாா்.

உடனே பேருந்தை நிறுத்தி இறங்கி, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்தவா்களிடம் உதவி கேட்டு, பெண்கள் இறங்கிய இடத்திற்குச் சென்றாா். அங்கு இருந்தவா்கள், அந்த இரு பெண்களும் சேத்துப்பட்டு நோக்கி சென்ற பேருந்தில் ஏறிவிட்டதாகத் தெரிவித்தனா்.

பின்னா் கல்பனா, அந்தப் பேருந்தை தொடா்ந்து சென்று மடம் கூட்டுச் சாலை அருகே நிறுத்தியபோது, அந்த 2 பெண்களும் பேருந்தில் இருந்தனா். அப்போது அவா்களிடம் சோதனை செய்தபோது நெக்லஸ் இருந்து தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 பெண்களையும் கல்பனா சேத்துப்பட்டு போலீஸில் ஒப்படைத்தாா்.

காவல் ஆய்வாளா் சின்னதுரை, உதவி ஆய்வாளா் நாராயணன் அந்த 2 பெண்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவா்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ராம்நகரைச் சோ்ந்த லதா (35), கோகிலா என்பது தெரியவந்தது.

தொடா்ந்து, அவா்கள் இதுபோன்று வந்தவாசி, பொன்னூா், பெரணமல்லூா், போளூா், சேத்துப்பட்டு, ஆரணி ஆகிய இடங்களில் பேருந்துகளில் பயனம் செய்து திருடி வந்தது தெரியவந்தது.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 554 மனுக்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 554 மனுக்கள் வரப்பெற்றன. குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.... மேலும் பார்க்க

பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது

வந்தவாசி அருகே பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கிராம பேருந்து நிறுத்தம் அருகில் சனிக்கிழமை இளைஞா் ஒருவா் நின்றுகொண்டு அந்த வழியாகச் ... மேலும் பார்க்க

பாம்பு கடித்து முதியவா் மரணம்

வந்தவாசி அருகே பாம்பு கடித்து முதியவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த வல்லம் கூட்டுச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு (68). இவா், கடந்த 12-ஆம் தேதி மாலை வீட்டிலிருந்தபோது விஷப் பாம்பு கடித்தது.... மேலும் பார்க்க

கவனிக்க ஆளில்லாததால் விரக்தி: முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கவனித்துக்கொள்ள ஆளில்லாததால் விரக்தியடைந்த முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா். செங்கத்தை அடுத்த கொட்டாவூா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (83). இவர... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் வட்டம், இளநகா் பகுதியைச் சோ்ந்தவா் மதன் (20). காஞ்சிபுரம் பகுதியில்... மேலும் பார்க்க

கங்கையம்மன், தண்டு மாரியம்மன், முனீஸ்வரன் கோயில்களில் கும்பாபிஷேகம்

ஆரணியை அடுத்த அடையபலம் ஸ்ரீகங்கையம்மன், இரும்பேடு ஸ்ரீதண்டு மாரியம்மன், வந்தவாசியை அடுத்த மருதாடு ஸ்ரீஆனைக்குட்டி முனீஸ்வரன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆரணியை அடுத்த அடையபலம... மேலும் பார்க்க