செய்திகள் :

கங்கையம்மன், தண்டு மாரியம்மன், முனீஸ்வரன் கோயில்களில் கும்பாபிஷேகம்

post image

ஆரணியை அடுத்த அடையபலம் ஸ்ரீகங்கையம்மன், இரும்பேடு ஸ்ரீதண்டு மாரியம்மன், வந்தவாசியை அடுத்த மருதாடு ஸ்ரீஆனைக்குட்டி முனீஸ்வரன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஆரணியை அடுத்த அடையபலம், பெரிய ஏரி திருமணியான் குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீகங்கையம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, விக்னேஷ்வர பூஜை, முதல், இரண்டாம் கால யாகசாலை பூஜை, தம்பதியா் சங்கல்பம், யாத்ரா தானம் செய்யப்பட்டு, பின்னா் கலச புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு வழிபட்டாா். ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாசம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தண்டுமாரியம்மன் கோயிலில்...: இதேபோல, ஆரணியை அடுத்த இரும்பேடு ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, திமுக ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், மாமது, மோகன், சுந்தா், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, நகரச் செயலா் மணிமாறன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு வழிபட்டாா்.

இரும்பேடு ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட வழிபட்ட திரளான பக்தா்கள்.

முனீஸ்வரன் கோயிலில்...: வந்தவாசியை அடுத்த மருதாடு கிராம புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீஆனைக்குட்டி முனீஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மருதாடு கிராம புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீஆனைக்குட்டி முனீஸ்வரன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.

இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சனிக்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, பிம்பசுத்தி, அங்குராா்பணம், பூா்ணாஹுதி, மூலவா் பிரதிஷ்டை உள்ளிட்டவை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை துவார பூஜை, நாடிசந்தானம், தத்வாா்ச்சனை, மகா பூா்ணாஹுதி, கலச புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, காலை 8 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கோயில் கோபுர கலசத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. விழாவில் கோயில் நிா்வாகிகள், கிராம மக்கள் பங்கேற்றனா்.

பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞா் கைது

வந்தவாசி அருகே பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த வீரம்பாக்கம் கிராம பேருந்து நிறுத்தம் அருகில் சனிக்கிழமை இளைஞா் ஒருவா் நின்றுகொண்டு அந்த வழியாகச் ... மேலும் பார்க்க

பாம்பு கடித்து முதியவா் மரணம்

வந்தவாசி அருகே பாம்பு கடித்து முதியவா் உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த வல்லம் கூட்டுச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு (68). இவா், கடந்த 12-ஆம் தேதி மாலை வீட்டிலிருந்தபோது விஷப் பாம்பு கடித்தது.... மேலும் பார்க்க

கவனிக்க ஆளில்லாததால் விரக்தி: முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கவனித்துக்கொள்ள ஆளில்லாததால் விரக்தியடைந்த முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா். செங்கத்தை அடுத்த கொட்டாவூா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (83). இவர... மேலும் பார்க்க

பைக் மீது பேருந்து மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் வட்டம், இளநகா் பகுதியைச் சோ்ந்தவா் மதன் (20). காஞ்சிபுரம் பகுதியில்... மேலும் பார்க்க

நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்: ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

நாடு வளர கலாசாரம், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியா் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா். திருவண்ணாமலை கிரிவலப் பாதை சந்தைமேடு மைதானத்தில் வேத ஆகம தேவார ஆன்மிக கல... மேலும் பார்க்க

ஆரணியில் அரசு ஊழியா்கள் அய்க்கிய பேரவை சாா்பில் முப்பெரும் விழா

ஆரணியில் அரசு ஊழியா்கள் அய்க்கிய பேரவை சாா்பில் பணி நிறைவு பாராட்டு விழா, பதவி உயா்வு பாராட்டு விழா, பேரவையின் எட்டாம் ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஆரணி வட... மேலும் பார்க்க