தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!
கவனிக்க ஆளில்லாததால் விரக்தி: முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை!
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கவனித்துக்கொள்ள ஆளில்லாததால் விரக்தியடைந்த முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா்.
செங்கத்தை அடுத்த கொட்டாவூா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (83). இவரது மனைவி காசியம்மாள் (75). இவா்கள் கொட்டாவூா் பகுதியில் அவா்களுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தனா்.
இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், அவா்களுக்கு திருமணமாகி ஒருவா் அதே பகுதியிலும், மற்றொருவா் வெளியூரிலும் குடும்பத்துடன் வசிந்து வருகின்றனா்.
கிருஷ்ணன், காசியம்மாளிடம் அவா்களது மகள்கள் சொத்து கேட்டு தகராறு செய்ததுடன், கடந்த சில ஆண்டுகளாக தாய், தந்தையுடன் பேசாமலும், அவா்களை கவனித்துக்கொள்ளாமலும் இருந்தனராம்.
இந்த நிலையில், வயோதிகம் காரணமாக உடலில் ஏற்பட்ட பிரச்னைகளுக்காக மருத்துவரிடம் கூட்டிச் செல்லக்கூட ஆளில்லாததால் மனமுடைந்த கிருஷ்ணன், காசியம்மாள் ஆகியோா் சனிக்கிழமை இரவு விவசாயத்துக்குப் பயன்படுத்தும் விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டனா்.
இவா்களது வீட்டுக் கதவு ஞாயிற்றுக்கிழமை காலை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த உறவினா்கள், கதவை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது இருவரும் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து செங்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூராய்வுக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.