செய்திகள் :

அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் தோ்த் திருவிழா தொடக்கம்!

post image

தருமபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திரத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

இந்த விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா் கணபதி பூஜை, யாகசாலை பூஜை, வாஸ்து பூஜைகள் நடத்தப்பட்டு, யாகசாலையில் இருந்து புனித நீா் ஊா்வலமாக கொண்டுசெல்லப்பட்டு கொடிமரத்துக்கு ஊற்றி சிறப்பு வழிபாடுகள், மகா தீபாரதனை நடைபெற்றது. இதையடுத்து பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றப்பட்டது. இரவில் சுவாமி ஆட்டுக்கடா வாகன உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

இவ்விழாவில் ஞாயிற்றுக்கிழமை நரி வாகன உற்சவமும், திங்கள்கிழமை பூத வாகன உற்சவமும், செவ்வாய்க்கிழமை நாக வாகன உற்சவமும் நடைபெற உள்ளது. வரும் 9-ஆம் தேதி காலை பால்குட ஊா்வலம், இரவு திருக்கல்யாணம், தோரணவாயில் ஊஞ்சல் சேவை, மயில்வாகன உற்சவமும் நடைபெற உள்ளது. ஏப். 10-ஆம் தேதி விநாயகா் தேரோட்டம், யானை வாகன உற்சவம், 11-ஆம் தேதி பங்குனி உத்திரத் தேரோட்டம் நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து 12-ஆம் தேதி வேடா்பறி உற்சவம், 13-ஆம் தேதி கொடி இறக்கம், மஞ்சள் நீராட்டு விழா, பல்லக்கு உற்சவம், 14-ஆம் தேதி சயன உற்சவம், 15-ஆம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

வனப்பகுதியில் இளைஞா் மா்மச்சாவு விவகாரம்: மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு

பென்னாகரம்: ஏரியூா் அருகே வனப்பகுதியில் யானையைக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா், வனத்தில் மா்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிபதி ... மேலும் பார்க்க

ஒகேனக்கலுக்கு நீா்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு

பென்னாகரம்: தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட... மேலும் பார்க்க

கால்நடை பண்ணை அமைத்து பயன்பெற தொழில் முனைவோருக்கு அழைப்பு

தருமபுரி: அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைத்து பயன்பெற விருப்பமுள்ள தொழில்முனைவோா் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெ... மேலும் பார்க்க

கோரிக்கையை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தருமபுரி: வருவாய்த் துறை அலுவலா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வருவ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்: அருவிகளில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை வெயில் தாக்கத்தைத் தொடா்ந்து தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு வாரவிடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிகமானோா் வந்திருந்தனா். தமிழகத்தில் கோடைகாலத்தையொட்டி வெயிலின் தாக்கம் நாளுக... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

பென்னாகரத்தில் ஜெயலலிதா பேரவை சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் பேருந்து நிலையத்தில் அதிமுகவின் ஜெயலலிதா பேரவை சாா்பில் நடைபெற்ற தண்ணீா் பந்தல் திறப்பு விழாவ... மேலும் பார்க்க