செய்திகள் :

`அபிஷேக்-க்கு இருக்கும் உரிமை அவருக்கும் இருக்கிறது..!’ - சொத்தை பிரிப்பது பற்றி அமிதாப் சொல்வதென்ன?

post image

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில், அதாவது 1990களின் இறுதியில் கடன் தொல்லையால் கஷ்டப்பட்டார். சொந்தமாக திரைப்படங்கள் தயாரித்து தோல்வி அடைந்தார். அதன் பிறகு கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி நடத்த ஆரம்பித்தார். படிப்படியாக நடித்து சம்பாதித்து இன்றைக்கு அவருக்கு 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமிதாப்பச்சனுக்கு நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் ஸ்வேதா பச்சன் நந்தா என இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

இதில் ஸ்வேதா டெல்லியை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இப்போது தனது குழந்தைகளோடு மும்பையில்தான் வசிக்கிறார். அவருக்கு அமிதாப்பச்சன் ரூ.50 கோடி மதிப்புள்ள ஒரு பங்களாவை தானமாக எழுதிக்கொடுத்தார். அமிதாப்பச்சன் தனது சொத்துக்களை தனது பிள்ளைகளுக்கு எப்படி பிரித்துக்கொடுக்கவேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்திருக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

அந்த உயில் குறித்து அமிதாப்பச்சன் அளித்திருந்த பேட்டியில்,'' நான் இறந்த பிறகு என்னிடம் இருப்பதை எனது மகன் மற்றும் மகளுக்கு சமமாக பிரித்துக்கொள்ள உயில் எழுதி இருக்கிறேன். எனது மகளையும், மகனையும் பிரித்துப்பார்க்கவில்லை. சொத்துக்களை சமமாக இருவருக்கும் கொடுக்கவேண்டும் என்று ஜெயாவும், நானும் நீண்ட நாட்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டோம். பெண்கள் கணவன் விட்டிற்கு செல்வதாக அனைவரும் சொல்கின்றனர். ஆனால் எனது கண்களுக்கு அபிஷேக் பச்சனுக்கு இருக்கும் அதே உரிமை எனது மகளுக்கும் இருப்பதாகவே பார்க்கிறேன்''என்று குறிப்பிட்டு இருந்தார்.

அபிஷேக் பச்சன் மனைவி ஐஸ்வர்யா ராயிக்கும் சொந்தமாக 800 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஐஸ்வர்யா ராய் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட போதிலும், விளம்பரங்களில் நடிப்பது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் கணிசமாக சம்பாதித்து வருகிறார் என்கிறது பாலிவுட் வட்டாரம்.

பெங்களூரு விமான கண்காட்சி: வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய இந்திய விமானப்படை - Photo Album

விமான படையினர் சாகச நிகழ்ச்சிகள்விமான படையினர் சாகச நிகழ்ச்சிகள்விமான படையினர் சாகச நிகழ்ச்சிகள்விமான படையினர் சாகச நிகழ்ச்சிகள்விமான படையினர் சாகச நிகழ்ச்சிகள்விமான படையினர் சாகச நிகழ்ச்சிகள்விமான பட... மேலும் பார்க்க

Kumbh Mela: குடியரசுத் தலைவர் வருகையால் திணறிய உ.பி; 300 கிமீ தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் நடந்து வரும் கும்பமேளாவால் உத்தரப்பிரதேசம் திணறி வருகிறது. ஒட்டுமொத்த நிர்வாகமும் கும்பமேளா நடைபெறும் இடத்தில் பணியாற்றி வருகிறது. அப்படி இருந்தும் மெளனி அமாவாச... மேலும் பார்க்க

Adani: 'ரூ.10 லட்சம் முதல் ரூ.10,000 கோடி வரை' - மகனின் திருமணத்தில் எடுத்த திடீர் முடிவு

ப்ரீ-வெட்டிங், கிராண்ட் வெட்டிங் என சென்ற ஆண்டு அம்பானி மகனின் திருமணத்தை உலகமே பேசித் தள்ள, இந்த ஆண்டு இந்தியாவின் இன்னொரு டாப் பணக்காரரான அதானியின் மகன் திருமணம் நேற்று முன்தினம் சத்தமே இல்லாமல் நடந... மேலும் பார்க்க

கடைசி நேரத்தில் எழுந்த கேள்வி; மணமகள் மாமாவால் வெளிவந்த உண்மை; திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்

மகாராஷ்டிராவில் சிபில் கணக்கு சரியில்லாத காரணத்தால் திருமணத்தையே மணப்பெண்ணின் குடும்பத்தினர் நிறுத்திவிட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகில் உள்ள முர்திஜாபூர் என்ற இடத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக... மேலும் பார்க்க

AI, பத்திரிகையாளர்களின் செய்தி ஆற்றலுக்கு மாற்றாக வரமுடியாது - DW இயக்குநர் ஜெனரல் பீட்டர் லிம்பர்க்

ஜெர்மன் அரசின் பொது ஒளிபரப்பு நிறுவனமான Deutsche Welle-இன் இயக்குநர் ஜெனரல், திரு. பீட்டர் லிம்பர்க், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், ஊடகங்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் குறித்து மாணவர்களிடையே உரையாற்றி... மேலும் பார்க்க