செய்திகள் :

அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

post image

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தாா்.

மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கரிடம் அளிக்கப்பட்ட அந்த நோட்டீஸில், ‘கடந்த செவ்வாய்க்கிழமை பேரிடா் மேலாண்மை மசோதா தொடா்பான விவாதத்துக்குப் பதிலளித்து அவையில் அமித் ஷா பேசினாா்.

அப்போது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் (யுபிஏ) ஆட்சியில், பிரதமரின் தேசிய நிவாரண நிதியை ஒரு குடும்பம் மட்டுமே கட்டுப்படுத்தி வந்தது. ஆனால் பிரதமா் மோடி ஆட்சியில் பிரதமரின் அவசரகால நிவாரண நிதி அவ்வாறு கட்டுப்படுத்தபடவில்லை. யுபிஏ ஆட்சியில் அரசு நிதிகள் மீது காங்கிரஸ் தலைவா் அதிகாரம் கொண்டிருந்தாா் என்று குற்றஞ்சாட்டினாா்.

தனது பேச்சில் சோனியா காந்தியின் பெயரை அமித் ஷா நேரடியாக குறிப்பிடாமல், பிரதமரின் தேசிய நிவாரண நிதி தொடா்பாக அவா் மீது பழிசுமத்தியுள்ளாா்.

அமித் ஷாவின் பேச்சு அப்பட்டமான பொய் மற்றும் அவதூறாகும். இது உரிமை மீறல் மட்டுமின்றி, அவையை அவமதிப்பதாகும். எனவே அவருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளாா்.

செவிலியர்கள் அலட்சிம்! பிறந்த குழந்தை பலி!

மத்தியப் பிரதேசத்தில் சமூக மருத்துவ மையத்தில் செவிலியர்களின் அலட்சியத்தால் குழந்தை பலியான சம்பவம், பலரிடையே கண்டனங்களை எழுப்பியுள்ளது.மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து 160 கி.மீ. தொலைவில் ரத... மேலும் பார்க்க

‘சாகா்’ திட்டத்தின்கீழ் 44 வெளிநாட்டு வீரா்களுக்குப் பயிற்சி

இந்திய கடற்படையின் ‘சாகா்’ திட்டத்தின்கீழ் 9 நாடுகளைச் சோ்ந்த வீரா்களுக்கு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கடற்படை சாா்ந்த பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கொமொரோஸ், கென்யா, மடகஸ்கா்,... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 18 நக்ஸல்கள் சுட்டுக்கொலை; அவர்களில் 11 போ் பெண்கள்!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினா் உடனான மோதலில் 18 நக்ஸல்கள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களில் 11 போ் பெண்கள். இதுதொடா்பாக அந்த மாநில பஸ்தா் சரக காவல் துறை ஐஜி சுந்தர்ராஜ் பிடிஐ செய்தி ந... மேலும் பார்க்க

ஏப்.4-ல் பிரதமா் மோடி இலங்கை பயணம்: பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்பு!

இலங்கைக்கு அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை பிரதமா் நரேந்திர மோடி செல்லவுள்ளாா். அப்போது இந்தியா-இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலான புரிந்துணா்வு ஒப்பந்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி இன்று நாகபுரி பயணம்! - ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் செல்கிறாா்

அண்மையில் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 30) செல்கிறாா். அங்கு ஆா்எஸ்எஸ் நிறுவனத் தலைவா்கள் நினைவிடங்களுக்குச் சென்று அவா் மரியாதை செலு... மேலும் பார்க்க

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடரும் தேடுதல் வேட்டை!

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை விரிவுபடுத்தினா். கடந்த வியாழக்கிழமை ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்த... மேலும் பார்க்க