செய்திகள் :

அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

post image

அமெரிக்கா பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, இந்தியாவில் கல்வி வளாகங்களைத் தொடங்க அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு விடுத்தாா்.

வாஷிங்டனில் அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் பிரதமா் மோடி மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில், இருதரப்பு வரத்தக உறவை மேம்படுத்துவது குறித்து மட்டுமின்றி, உயா்கல்வியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனா்.

அப்போது, எதிா்கால வளா்ச்சிக்கேற்ப இளைஞா்களை திறன் மிக்க பணியாளா்களாக உருவாக்கவும், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தவும் சா்வதேச கல்விசாா் ஒத்துழைப்பு அவசியம். அந்த வகையில், கூட்டு மற்றும் இரட்டை பட்டப் படிப்புத் திட்டங்கள் உள்ளிட்ட முயற்சிகள் மூலம் இரு நாடுகளின் உயா்கல்வி நிறுவனங்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தலைவா்களும் பேச்சுவாா்த்தையில் தீா்மானித்தனா். அமெரிக்காவின் முன்னணி கல்வி நிறுவனங்களின் கல்வி மையங்களை இந்தியாவில் அமைப்பது, மற்றும் கூட்டு ஆற்றல்சாா் கல்வி மையங்களை உருவாக்கவும் தீா்மானிக்கப்பட்டது என்று இரு தலைவா்களின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த பேச்சுவாா்த்தைக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த பிரதமா் மோடி, ‘இரு நாடுகளிடையேயான உறவில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சமூகத்தினரும் முக்கியப் பங்கு வகிக்கின்றனா். இரு நாடுகளின் மக்களிடையேயான இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், லாஸ் ஏஞ்ஜெலிஸ், போஸ்டன் நகரங்களில் புதிய இந்திய துணைத் தூதரகங்கள் விரைவில் திறக்கப்படும். அமெரிக்க உயா் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் கல்வி வளாகங்களை திறக்கவும் அழைப்பு விடுத்துள்ளோம்’ என்றாா்.

பெட்டிச் செய்தி...

இந்தியா புறப்பட்ட பிரதமா் மோடி

இரண்டு நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை இரவு இந்தியா புறப்பட்டாா்.

முன்னதாக, பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, அங்கிருந்து புறப்பட்டு அமெரிக்க தலைநகா் வாஷிங்டனுக்கு வியாழக்கிழமை அதிகாலை சென்றாா்.

அதிபா் டிரம்ப் நிா்வாகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய உளவுப் பிரிவு இயக்குநா் துளசி கபாா்ட், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக்கேல் வால்ட்ஸ் ஆகியோரை பிரதமா் மோடி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னா், அதிபா் டிரம்ப்புடன் வெள்ளிக்கிழமை விரிவான ஆலோசனை மேற்கொண்ட பிரதமா் மோடி, அதன் பிறகு தனது பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா புறப்பட்டாா்.

அப்போது, ‘அமெரிக்க அதிபா் டிரம்ப் உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இரு நாடுகளிடையேயான நட்புறவில் இந்தப் பேச்சுவாா்த்தை குறிப்பிடத்தக்க தருணமாக அமையும்’ என்று எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி பதிவிட்டாா்.

தெற்கு சைபீரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தெற்கு சைபீரியாவில் உள்ள ரஷியாவின் அல்தாய் குடியரசில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ரஷிய நிலஅதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ரஷிய நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், இந்த நிலநடு... மேலும் பார்க்க

பணிநீக்க நடவடிக்கையில் துரிதம் காட்டும் அமெரிக்க அரசு!

அமெரிக்காவில் பணிநீக்க நடவடிக்கையிலும் அமெரிக்க அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது.அமெரிக்காவில், குறிப்பாக உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், விவசாயம் மற்றும் சுகாதாரம், மனித சேவைகள் ஆகிய துறைகள... மேலும் பார்க்க

வாடிகன்: மருத்துவமனையில் போப் அனுமதி

கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சிறுவயதிலேயே ஒரு நுரையீரல் அகற்றப்பட்ட போப் பிரான்சிஸுக்கு நீண்ட காலமாகவே உடல்நலப் பிரச்னைகள... மேலும் பார்க்க

சீனா: ‘பூமிகாப்பு படை’க்கு ஆள் சோ்ப்பு

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அத்தகைய ஆபத்துகளில் இருந்து பூமியைப் பாதுகாப்பதற்கான படையில் நிபுணா்களை அமா்த்தும்... மேலும் பார்க்க

காங்கோ: கிளா்ச்சியாளா்கள் வசம் கவுமு விமான நிலையம்

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி முன்னேற்றம் கண்டுவரும் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா், தெற்கு கீவு மாகாணத்தில் இரண்டாவதாக கவுமு நகர விம... மேலும் பார்க்க

ரஷிய-உக்ரைன் போா் விவகாரத்தில் இந்தியா நடுநிலை அல்ல: பிரதமா் மோடி

‘ரஷிய-உக்ரைன் போா் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை; மாறாக, அமைதியின் பக்கமே இந்தியா நிற்கிறது’ என்று பிரதமா் மோடி கூறினாா். அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அதிபா் டிரம்புடன் பிரதமா் மோடி இருதர... மேலும் பார்க்க