செய்திகள் :

அமெரிக்காவில் இந்து கோயில் மீது தாக்குதல்; வெடித்த சர்ச்சை... `அருவருப்பான செயல்' -இந்தியா கண்டனம்

post image

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள BAPS (போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா) கோயில் சில மர்ம நபர்களால் தாக்குதலுக்கு உள்ளானது. இது அங்குள்ள இந்துக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய‌‌ அரசு கலிஃபோர்னியாவில் இந்து கோவில் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது

இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திலுள்ள ரன்தீர் ஜெய்ஸ்வால் "கலிபோர்னியாவின் சினோ ஹில்ஸில் உள்ள ஒரு இந்து கோயிலில் நடந்த வன்முறையை நாங்கள் பார்த்தோம். இத்தகைய அருவருப்பான செயல்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இது போன்ற இடங்களுக்குப் போதுமான பாதுகாப்பை உறுதி செய்யவும் உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளை நாங்கள் கோருகிறோம்." என்று கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள BAPS (போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா) அமைப்பு இந்து சமூகம் இத்தகைய வெறுப்புக்கு எதிராக உறுதியாக நிற்கிறது என்று கூறியுள்ளது. 'சினோ ஹில்ஸ் மற்றும் தெற்கு கலிபோர்னியாவின் சமூகத்துடன் இணைந்து, வெறுப்பு வேரூன்றாதவாறு நாங்கள் எப்போதும் தடுப்போம். நமது மனிதநேயமும் நம்பிக்கையும் அமைதியும் அன்பும் வெல்லும்' என்று BAPS அமைப்பு தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த கோயிலின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் இந்த செயலைக் கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. "உலகிலுள்ள அனைத்து BAPS ஆலயங்களைப் போலவே அமைதி, நல்லிணக்கம், சமத்துவம், தன்னலமற்ற சேவை மற்றும் உலகளாவிய இந்து மத மதிப்புகளின் சின்னமாகவே இந்த ஆலயமும் செயல்படுகிறது.

இந்த தாக்குதல் செயல்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம் மேலும், அனைத்து சமூகங்களுக்கிடையேயும் அமைதி நிலவ வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்," என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

வட அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளில் 10 இந்து கோயில்கள் தாக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``விஜய் கொள்கைகளை வரவேற்கிறோம். ஆனால்..." - துரை வைகோ சொல்வதென்ன?

மதுரையில் நடந்த மதிமுக நிர்வாகி குடும்ப விழாவில் கலந்துகொண்ட துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது "மக்காச்சோளத்துக்கு செஸ் வரி போட்டிருந்ததை நீக்க வேண்டும் என்று முதல்வரையும், துணை முதல்வரையும் நிதி... மேலும் பார்க்க

GST: ``வரி குறைவது இருக்கட்டும்; முதலில் அடிப்படையை மாற்றுங்கள்..'' - ஜெய்ராம் ரமேஷ் சாடல்

நேற்று நடந்த விருது நிகழ்ச்சி ஒன்றில் நிர்மலா சீதாராமன், "இனி ஜி.எஸ்.டி வரி குறையும்" என்று கூறியுள்ளார். இதுக்குறித்து காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில... மேலும் பார்க்க

``பாஜக - நோட்டாவுக்கு போட்டி; தவெக ஒரு பொருட்டே இல்லை..'' - புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி தடாலடி

`நோட்டாவுடன் போட்டி..' - அமைச்சர் ரகுபதிபுதுக்கோட்டையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,"பா.ஜ.க-வினர் முன்னாடி மிஸ்டு கால் கொடுத்து அவர்களது கட்சிக்கு ஆள் சேர்த்தனர். அத... மேலும் பார்க்க

Syria: 2 நாள் தாக்குதலில் 1000-க்கும் மேற்பட்டோர் கொடூர கொலை... சிரியாவில் நடந்த கோர சம்பவம்..

சிரியாவில் உள்நாட்டு கலவரம்மத்திய கிழக்கு நாடான சிரியாவில் இரண்டு நாள்களாக நடந்து வரும் உள்நாட்டு கலவரத்தில் பெண்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.சிரியாவில் உள்ள `மனித உரிமைகள் கண்கா... மேலும் பார்க்க

Jagdeep Dhankhar: துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நெஞ்சுவலியால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவின் துணை ஜனாதிபதியாகவும், ராஜ்யசபாவின் தலைவராகவும் உள்ளார் ஜக்தீப் தன்கர் (வயது 73). இன்று அதிகாலை 2 மணியளவில் ஜகதீப் தன்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை அவரது குடும்பத்தினர் டெல்... மேலும் பார்க்க

அடுத்தடுத்து ED RAID - சுற்றிவளைக்கப்படுகிறாரா செந்தில் பாலாஜி? Amit Shah Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,Intro: Vikatan.com is Back - உயர்நீதிமன்றத்தில் நடந்தது என்ன? * அமெரிக்காவுடன் எந்தவிதமான போருக்கும் தயார் - சீனா* சீனா ராணுவத்துக்கு அதிக பட்ஜெட் ஒதுக்கீடு?* தேஜஸ் போர் ... மேலும் பார்க்க