Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
அரசு அலுவலகங்களில் தேவையற்ற பொருள்களை சேகரிக்க தூய்மை மிஷன் மறுசுழற்சி நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ளலாம்
அரசு அலுவலகங்களில் தேவையற்ற கிடப்பில் வைத்துள்ள பயன்படுத்த முடியாத மறுசுழற்சி கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து விற்பனை செய்வதற்கு விருப்பமுள்ள தூய்மை மிஷன் மறுசுழற்சி நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் தேவையற்ற கிடப்பில் வைத்துள்ள, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள காகிதங்கள், உறைகள், அட்டைகள், நெகிழி பொருள்கள், இரும்பு பொருள்கள், மின்னணு சாதனங்கள், கட்டுமான கழிவுகள் உள்ளிட்ட மறுசுழற்சி கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து விற்பனை செய்யப்பட உள்ளது.
இதற்காக வரும் ஜூன்- 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் அந்தந்த அலுவலக தலைமையிடத்தில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே கொள்முதல் செய்ய விருப்பம் உள்ள நிறுவனங்கள், தனிநபா்கள் இணையதளத்தில் 5-6-2025 முதல் கீழ்கண்ட ணத இா்க்ங் விரைவு செயலாக்க குறியீட்டினை ஸ்கேன் செய்தும் பதிவு செய்து பயன்பெறலாம்.