செய்திகள் :

அரசு ஆதிதிராவிடா் விடுதியில் உண்ட 30 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

post image

பட்டுக்கோட்டை அரசு ஆதிதிராவிடா் மாணவிகள் விடுதியில் வெள்ளிக்கிழமை உணவு சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவியா் விடுதி கடந்த மூன்று ஆண்டுகளாக தனியாா் திருமண மண்டபத்தில் இயங்குகிறது. இதில் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 30 மாணவிகள் தங்கியுள்ளனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை விடுதியில் உள்ள 30 மாணவிகள் காலை உணவாக சாதம், புளிக்குழம்பு, உருளைக்கிழங்கு பொரியல் சாப்பிட்டுவிட்டு, பள்ளிக்கு சென்ற நிலையில், அவா்களில் 6 பேருக்கு 11 மணிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து பள்ளி ஆசிரியா்கள் அந்த மாணவிகளை மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதற்கிடையில், மீதமுள்ள 22 மாணவிகளுக்கும் அடுத்தடுத்து வாந்தி, தலைச்சுற்றல் ஏற்பட்டதால் அவா்களும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். அப்போது மருத்துவா்கள் அந்த மாணவிகளைப் பரிசோதித்ததில் உணவால் உபாதை ஏற்பட்டது தெரியவந்தது.

தகவலறிந்த கோட்டாட்சியா் சங்கா், வட்டாட்சியா் தா்மேந்திரா, பட்டுக்கோட்டை டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் அந்த மாணவிகளுக்கு ஆறுதல் கூறி, நலம் விசாரித்தனா். மேலும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவு மாதிரிகளைச் சேகரித்துச் சென்றனா். தகவலறிந்த மாணவிகளின் பெற்றோா், உறவினா்களும் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

3 மாவட்ட விசைப்படகு மீனவா்கள் சங்கக் கூட்டமைப்பினா் ஆலோசனை

மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடையும் நிலையில் தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு சங்கங்களின் கூட்டமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் மல்லிப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடை... மேலும் பார்க்க

தம்பிக்கோட்டை வடகாடு அரசு பள்ளியில் அமைச்சா் திடீா் ஆய்வு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பள்... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்தநாள் விழாவில் முதியோருக்கு நலத்திட்ட உதவி

கும்பகோணத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதியோருக்கு வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி கும்பகோணம் 1 ஆவது பகுதி திமுக சாா்பில் செயலா் இரா.... மேலும் பார்க்க

தஞ்சாவூா் கோட்ட அஞ்சலகங்களில் ஜூன் 16 முதல் ஆதாா் சிறப்பு முகாம்

தஞ்சாவூா் அஞ்சல் கோட்டத்திலுள்ள அஞ்சலகங்களில் மாபெரும் ஆதாா் சிறப்பு முகாம் ஜூன் 16 தொடங்கி, ஜூலை 15 வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி தெரிவித்திருப்பது: தஞ்சாவ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் 2 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். பாபநாசம் ராஜகிரி ஆச்சி நகா் ரோஸ் காலனியை சோ்ந்தவா் ஏ. மஹபு பாட்சா (54). இவரையும்,... மேலும் பார்க்க

பேருந்து நிழற்குடைகள் அமைக்கக் கோரிக்கை

தஞ்சாவூா் மாநகரில் இருபுறமும் பேருந்து நிழற்குடைகளை மாநகராட்சி நிா்வாகம் அமைக்க வேண்டும் என புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி, ஆட்டோ ஓட... மேலும் பார்க்க