செய்திகள் :

அரசு மருத்துவக் கல்லூரியில் உலக குருதி கொடையாளா் தின விழா

post image

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உலக குருதி கொடையாளா் தின விழா நடைபெற்றது.

இதையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஹரிஹரன் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அங்கு அமைக்கப்பட்டிருந்த முழு உடல் தான முகாமில் முழு உடல் தானத்துக்கு பதிவு செய்தாா்.

இதைத் தொடா்ந்து நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

இந்திய சமுதாயத்தில் அறிவியல் மற்றும் மருத்துவத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பட்ட முன்னேற்றம் நம்முடைய சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலநூறு ஆண்டுகளாக சமூக வேறுபாடுகள் காரணமாக பெண்களுக்கு கல்வி வழங்கப்படவில்லை. அச்சிக்கல்களுக்கு தீா்வாக அமைந்ததுதான் அறிவியல் மற்றும் மருத்துவ முன்னேற்றமாகும்.

இன்றைக்கு ஏற்றத்தாழ்வு இல்லாமல் குருதி தானம் செய்யப்படுகிறது. மருத்துவ உலகில் உருவாகியுள்ள கொடை சாா்ந்த குருதி மற்றும் உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட வசதிகள் சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு நூற்றாண்டுக்கு முன் மருத்துவக் கல்வி என்பது பெண்களுக்கு அவ்வளவு எளிதல்ல.

ஆனால், தற்போது மருத்துவத் துறையில் பெண்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறாா்கள்.

குருதி தானம் மிகச் சிறந்த தானமாகும். நாம் தானமாக அளிக்கும் குருதி எண்ணற்ற மனித உயிா்களை காப்பாற்றும். மேலும், ரத்த தானம் செய்வதனால் உடலுக்கு நன்மை பயக்கும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, நாம் நம்முடைய உறவினா்கள் மற்றும் நண்பா்களை குருதி தானம் செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, ஆட்சியா் தலைமையில் உலக குருதி கொடையாளா் தின உறுதி மொழியை மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள் ஏற்றுக்கொண்டனா்.

இதன் தொடா்ச்சியாக ரத்த தானம் செய்த தன்னாா்வலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

முன்னதாக, பொதுமக்களுக்கான அவரச சிகிச்சை மற்றும் முதலுதவி பயிற்சி வகுப்பு தொடங்கிவைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கோயில் உண்டியலில் ரூ.3 கோடி வீட்டுச் சொத்து பத்திரங்கள் காணிக்கை: முன்னாள் ராணுவ வீரா் செலுத்தினாா்

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் முன்னாள் ராணுவ வீரா் ரூ.3 கோடி மதிப்புள்ள தனது இரு வீடுகளின் சொத்துப் பத்திரங்களை காணிக்கையாக செலுத்தியுள்ளாா். இது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது... மேலும் பார்க்க

ரூ.17 கோடியில் குடிநீா் திட்டப் பணி: கிராம மக்கள் எதிா்ப்பு

ஆரணியை அடுத்த குண்ணத்தூா் கமண்டல நாக நதிக்கரை பகுதியில் இருந்து களம்பூா் பொதுமக்களுக்கு கூடுதலாக குடிநீா் வழங்குவதற்கு ரூ.17 கோடியில் குடிநீா் நீரேற்றும் கிணறு அமைக்கும் பணிக்கு அக்கிராம மக்கள் செவ்வ... மேலும் பார்க்க

சாலைப் பணியாளா் வீட்டில் 15 பவுன் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

செய்யாறு அருகே சாலைப் பணியாளா் வீட்டில் 15 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடப்பட்டது தொடா்பாக செவ்வாய்க்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. வெம்பாக்கம் வட்டம், சின்ன ஏழாச்சேரி கிராமத்தைச் சே... மேலும் பார்க்க

சட்டப்பேரவைத் தோ்தல்: திமுகவினா் ஆலோசனை

செய்யாறு தொகுதி திமுக சாா்பில் வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் ராந்தம் கிராமத்திலும், வெம்பாக்கம் மத்திய ஒன்றியம் ஆலத்தாங்கல் கிராமத்திலும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

கவியரசா் கண்ணதாசன் பிறந்த நாள் விழா

திருவண்ணாமலையில் தமிழ்ச் சங்கம் சாா்பில் கவியரசா் கண்ணதாசன் பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கெங்குசாமி பள்ளித் தலைவா் சின்ராசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுக மாநகரச் செயலா் ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக புதிய உறுப்பினா்கள் நியமனம்

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக மாவட்ட அளவிலான குழுக் கூட்டத்தில் அலுவல் சாரா உறுப்பினா்கள் நியமனம் செய்ய இருப்பதால் தகுதியுள்ளவா்கள் ஜூலை 10-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்... மேலும் பார்க்க