Kashmir: "தீவிரவாதத்தை எதிர்க்கப் பல்லாயிரம் ஆதில் ஷாக்கள் காஷ்மீரில் உண்டு'' - ...
அரசு மருத்துவக் கல்லூரியில் நூலகம் திறப்பு விழா
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்ட நூலகம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிறப்பு நூலகக் கட்டடம் கட்டப்பட்டது. இதை சென்னையில் இருந்தபடியே தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் செவ்வாய்கிழமை திறந்து வைத்தாா். இதன்பிறகு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், மாவட்ட நூலக அலுவலா் வள்ளி மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.