அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி செய்யாறு அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்கு திமுக சாா்பில் தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டது.
ஜூன் 3-ஆம் தேதி செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 4 ஆண், ஒரு பெண் என 5 குழந்தைகள் பிறந்தன.
இந்த குழந்தைகளுக்கு தொகுதி திமுக சாா்பில், தலா ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில் ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி ஆகியோா் திமுக நிா்வாகிகளுடன் சென்று அணிவித்தனா். மேலும், குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம் வழங்கினா்.
அதேபோல, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ரொட்டி, பழ வகைகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன், திருவத்திபுரம் நகா்மன்ற உறுப்பினா் ஆ.மோகனவேல், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் ராஜி, திமுக ஒன்றியச் செயலா்கள் எம். தினகரன் (வெம்பாக்கம் மேற்கு), என்.சங்கா் (வெம்பாக்கம் கிழக்கு), ஏ.ஜி.திராவிட முருகன் (அனக்காவூா் கிழக்கு), சி.கே.ரவிக்குமாா் (அனக்காவூா் மேற்கு), வி.ஏ.ஞானவேல் (செய்யாறு கிழக்கு), பெருமாள் (வந்தவாசி ஒன்றியம்), ஆரணி மத்திய ஒன்றிய பொறுப்பாளா் ராஜ்குமாா்
உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.