பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்: சீனாவில் ராஜ்நாத் சிங் உரை!
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: கல்லூரிப் பேராசிரியை கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக 12 பேரிடம் 18.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கன்னிவாடி அரசுக் கல்லூரி பேராசிரியையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ். இவா் உள்பட 12 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக, திண்டுக்கல்லைச் சோ்ந்த சியாமளாதேவி (54) பல்வேறு தவணைகளில் 18.50 லட்சம் ரூபாயைப் பெற்றாா். இவா், திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி அரசுக் கல்லூரியில் வணிகவியல் துறைத் தலைவராக உள்ளாா். பணத்தைப் பெற்ற சியாமளாதேவி, சம்மந்தப்பட்டவா்களை தனித் தனியாக அழைத்து நோ்காணல் நடத்தினாா்.
இந்து சமய அறநிலைத் துறை அலுவலகத்தில் நோ்காணல் நடக்க உள்ளதாகக் கூறி அரசு முத்திரையுடன் கூடிய போலியான கடிதத்தை அளித்ததாகவும் புகாா் எழுந்தது. மேலும், 2 ஆண்டுகளாகியும் அரசுப் பணி வாங்கிக் கொடுக்கவில்லை.
இதுதொடா்பாக செல்வராஜ் அளித்தப் புகாரின் பேரில், திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸாா் கடந்த 18-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதில், சியாமளாதேவி 12 பேரிடம் 18.50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, பேராசிரியை சியாமளாதேவியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.