தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது
தருமபுரியில் இளைஞரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 9 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், கோணங்கி அள்ளி பகுதியைச் சோ்ந்தவா் திருமுருகன் (36). இவா், கடந்த 2021 ஆம் ஆண்டு தருமபுரி பகுதியைச் சோ்ந்த மாதவன் (57) என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதற்காக ரூ. 9 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை பெற்று கொண்ட மாதவன் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி, காலம்தாழ்த்தி வந்துள்ளாா்.
இது குறித்து மாதவன் மீது தருமபுரி நகரக் காவல் நிலையத்தில் திருமுருகன் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில் போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்து மாதவனை கைது செய்தனா்.