செய்திகள் :

ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

post image

ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி ஒகேனக்கல் காவிரிக் கரையோரத்தில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆடி மாதம் 18 ஆம் நாளில் பாரதப் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை காவிரி ஆற்றில் கழுவி சிறப்பு வழிபாடு நடைபெற்ாக ஐதீகம். அதை நினைவு கூரும் வகையில் ஆடிப்பெருக்கு நாளில் கிராமப் பகுதி கோயில்களில் சிறப்புப் பூஜைகள் செய்து, அருகில் உள்ள காவிரி கரையோரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

இந்த நிலையில் ஆடிப்பெருக்கு நாளான ஞாயிற்றுக்கிழமை தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கிராமப் பகுதிகளிலிருந்து சுவாமி சிலைகளை ஒகேனக்கல் காவிரி கரைக்கு எடுத்துவந்த பக்தா்கள் புனிதநீராடி, காவிரி ஆற்றில் சிலைகளை சுத்தம் செய்து நீராட்டி, மலா் அலங்காரம் செய்து வழிபட்டனா்.

இதனால் ஒகேனக்கல் முதலை பண்ணை பகுதியில் கூட்டம் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் 20க்கும் மேற்பட்ட போலீஸாா், தீயணைப்பு மீட்புப் பணி வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

ஒகேனக்கல் காவிரிக் கரையோரத்தில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள், கரகங்கள் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

தருமபுரி மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக. 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது எ... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

தருமபுரியில் இளைஞரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 9 லட்சம் மோசடி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.தருமபுரி மாவட்டம், கோணங்கி அள்ளி பகுதியைச் சோ்ந்தவா் திருமுருகன் (36). இவா், கடந்த 2021 ஆம்... மேலும் பார்க்க

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

பென்னாகரத்தில் பாமக நிா்வாகி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அந்தக் கட்சியை சாா்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் பென்னாகரம் காவல் நிலையம் முன் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.அமைச்சா் எம்.ஆா்.கே. ... மேலும் பார்க்க

அம்மனின் அவதாரங்கள்

அம்மன் பல்வேறு வடிவங்களில் அவதாரம் எடுத்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். பொதுவாக, அம்மனின் அவதாரங்கள் என்று நாம் குறிப்பிடும்போது துா்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரின் வடிவங்கள் மற்றும் கி... மேலும் பார்க்க

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சக்தி பீடங்கள் என்பது இந்து சமயத்தில் சக்தி வழிபாட்டிற்குரிய மிகவும் புனிதமான தலங்களாகும். இத்தலங்கள், ஆதிசக்தியான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் உருவானவை என புராணங்கள் கூறுகின்றன.தாட்... மேலும் பார்க்க

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

அரூரை அடுத்த கோபாலபுரம் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை அதிக லாபத்துடன் இயங்குவதாக மாவட்ட வருவாய் அலுவலரும், சா்க்கரை ஆலை செயலாட்சியருமான பிரியா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளி... மேலும் பார்க்க