ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் பந்துவீச்சு!
அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனம் அருகே அரசுப் பள்ளி ஆசிரியா் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், ஆத்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் சரவணன் (44), திருமணம் ஆனவா். இவா் மரக்காணம் அடுத்துள்ள கைபானிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு சனிக்கிழமை திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்துப் பாா்த்தபோது சரவணன் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் பிரம்மதேசம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.இறந்து போன சரவணனுக்கு மனைவி வெண்ணிலா மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனா்.