செய்திகள் :

அரசுப் பள்ளிகள் பராமரிப்புக்கு ரூ.61.53 கோடி விடுவிப்பு

post image

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு நிகழ் கல்வியாண்டின் பராமரிப்புச் செலவினங்களுக்காக இரண்டாம் கட்டமாக ரூ.61.53 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு 2024-2025-ஆம் ஆண்டுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் தொடா் செலவினத்துக்கான மானிய பரிந்துரை வழங்கியுள்ளது.

அதன்படி, 2-ஆம் கட்ட 50 சதவீத மானியத்தை பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் மாவட்டங்கள் வாரியாக நிதியானது விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்காக ரூ.61 கோடியே 53 லட்சத்து 22,000 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ரூ.3.36 கோடியும், சேலத்துக்கு ரூ.3.24 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை பொருத்தவரை 1 முதல் 30 வரையான மாணவா்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு ரூ.10 ஆயிரம், 31 முதல் 100 வரை ரூ.25,000, 101 முதல் 250 வரை ரூ.50,000, 251 முதல் 1,000 வரை ரூ.75,000, ஆயிரத்துக்கு மேல் ரூ.1 லட்சமும் நிதி வழங்கப்படுகிறது.

அவ்வாறு ஒவ்வொரு பள்ளிக்கும் விடுவிக்கப்படும் மானியத் தொகையில் 10 சதவீதத்தை சுகாதார செயல் திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும். இந்த நிதியை பள்ளி மேலாண்மைக் குழு வழியாகவே செலவிட வேண்டும்.

இந்தத் தொகை வாயிலாக வாங்கப்பட்ட பொருள்கள், செலவினங்கள் ஆகியவற்றுக்கான ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின்கீழ் மத்திய அரசு தன் பங்கு நிதியை வழங்காத நிலையிலும், மாநில அரசு அதன் பங்களிப்பிலிருந்து நிதியை விடுவித்துள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க