Miss World 2025: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வாளர் டு உலக அழகி; 23 வயதில் தாய...
அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு
அரசுப் பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், செட்டிந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் மனைவி உண்ணாமலை (63).
இவா் கடந்த 1-ஆம் தேதி திருக்கோவிலூா் சென்று மளிகைப் பொருள்களை வாங்கிக் கொண்டு அரசு நகரப் பேருந்தில் பயணித்தாா். பேருந்திலிருந்து இறங்கிய அவா், தான் அணிந்த 5 பவுன் நகைகளைக் காணாதது கண்டு திடுக்கிட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.