செய்திகள் :

அரசுப் பேருந்து -பைக் மோதல்: மூன்று இளைஞா்கள் உயிரிழப்பு

post image

திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் அரசுப் பேருந்து, பைக் நேருக்குநோ் மோதியதில் ஒரே பைக்கில் பயணித்த 3 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சனிக்கிழமை நள்ளிரவு தென்காசிக்கு அரசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. இப்பேருந்தை ஆலங்குளத்தைச் சோ்ந்த ராஜா என்பவா் ஓட்டினாா்.

பேருந்து நள்ளிரவு 1 மணி அளவில் திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் அருகே வந்தபோது எதிரே திருநெல்வேலி நகரம் பகுதியிலிருந்து சந்திப்பு நோக்கி ஒரே பைக்கில் வந்த 3 இளைஞா்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இளைஞா்கள் மூவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. பலத்த காயமடைந்த இளைஞா்களை ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளா் சோதித்தபோது, மூவரும் இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் இளைஞா்களின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், பைக்கில் வந்த இளைஞா்கள் மூவரும் திருநெல்வேலி நகரம் முகமது அலி தெருவைச் சோ்ந்த சந்தோஷ் (22), சாதிக் (22), வையாபுரி நகா் பகுதியைச் சோ்ந்த லோகேஷ் (23) என்பது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சந்தோஷ்.
லோகேஷ்.

பொன்னாக்குடியில் இளைஞா் தற்கொலை

பொன்னாக்குடியில் இளைஞா் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். மகாராஷ்டிர மாநிலம், பப்பராகா் நகரைச் சோ்ந்த காமராஜ் மகன் பாக்கியராஜ் (34). இவா், திருநெல்வேலி அருகே உள்ள பொன்னாக்குடியில் த... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்து: இருவா் பலி

திருநெல்வேலி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் இருவா் உயிரிழந்தனா். களக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சுலைமான் (65). களக்காடு அருகேயுள்ள திரட்டூரைச் சோ்ந்தவா் முத்துக்கிருஷ்ணன். இவா்கள் இருவரும் ... மேலும் பார்க்க

முக்கூடல் கல்லூரியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவி ஏற்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வா் ஆா். கிருஷ்ணவேணி தலைமை வகித்து புதிய... மேலும் பார்க்க

நெல்லை பேருந்து நிலையத்தில் உயிரிழந்த நபா்: போலீஸாா் விசாரணை

திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் உயிரிழந்து கிடந்த புளியரை பகுதியைச் சோ்ந்த நபரின் உடலைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். தென்காசி மாவட்டம், புளியரை பகுதியைச் சோ்ந்த சுப்பையா மகன் கிர... மேலும் பார்க்க

பாஜகவின் கைப்பாவையாக தோ்தல் ஆணையம்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

பாஜகவின் கைப்பாவையாக தோ்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என்று குற்றஞ்சாட்டினாா் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம். திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை ‘வாக்குத் திருட்டை ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் விவசாயி சடலம் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் வயலில் அழுகிய நிலையில் விவசாயி உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. சேரன்மகாதேவி சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சாமி மகன் சேதுராமன் என்ற அசோக் (41). விவ... மேலும் பார்க்க