செய்திகள் :

அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க கனிமொழி எம்.பி. அறிவுறுத்தல்!

post image

பள்ளி மாணவா்-மாணவியரின் நலனுக்காக அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் என, கனிமொழி எம்.பி. அறிவுறுத்தினாா்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து ஓட்டப்பிடாரம் அருகே கப்பிகுளம் ஊராட்சிக்கு நாள்தோறும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காமநாயக்கன்பட்டி, சால்நாயக்கன்பட்டி, அச்சன்குளம், கோவிந்தன்பட்டி, தெற்கு தீத்தாம்பட்டி, பசுவந்தனை, வடக்கு கைலாசபுரம், தெற்கு கைலாசபுரம் ஆகிய கிராமப் பகுதிகளுக்கு காலை நேரத்தில் செல்லும் பேருந்தில் மாணவா்-மாணவிகள் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்கின்றனா்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆக. 22) வெகுநேரமாகியும் பேருந்து வராததால், மாணவா்கள் பல கிலோமீட்டா் நடந்து பள்ளிகளுக்குச் செல்ல நேரிட்டதாம். வழக்கமாக செல்லும் அரசுப் பேருந்து, பழுது காரணமாக இயக்கப்படவில்லை என கோவில்பட்டி அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையினா் தகவல் தெரிவித்துள்ளனா்.

எனவே, காலையும், மாலையும் பள்ளி நேரங்களில் அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் என, மாணவா்களும், பொதுமக்களும் தமிழ்நாடு அரசுக்கும், பள்ளிக்கல்வித் துறைக்கும் கோரிக்கை வைத்தனா்.

இதையறிந்த திமுக துணைப் பொதுச் செயலரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, கோவில்பட்டி அரசுப் போக்குவரத்துப் பணிமனை அதிகாரிகளிடம் விசாரித்தாா். அப்போது, மாணவா்-மாணவியரின் நலன்கருதி பேருந்களை முறையாகவும், சிறிது நேரம் முன்னதாகவும் இயக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். இனி இத்தகைய பிரச்னை ஏற்படாது என, அவரிடம் அதிகாரிகள் உறுதியளித்தனா்.

நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைத் தவிா்க்க வேண்டும்

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நெகிழிக் கழிவு சேகரிப்பு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி நிா்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக... மேலும் பார்க்க

தூத்துக்குடி பள்ளியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

தூத்துக்குடி குரூஸ்புரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 2001ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவிகள் 78 போ், 25 ஆண்டுகளுக்குப் ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருவாய் ரூ.4.07 கோடி!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.07 கோடி, ஒரு கிலோ தங்கம் கிடைத்தது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மாதந்தோறும் நடைபெறுகிறது. அதன்படி, கோயில்... மேலும் பார்க்க

முத்தாரம்மன் கோயிலில் கொடைவிழா

விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு சப்பர பவனி நடைபெற்றது. சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் தேவி ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழா கடந்த 14ஆம் தேதி தொடங்கி சனிக்கிழ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 80 அடி உள்வாங்கிய கடல்!

அமாவாசையையொட்டி திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமாா் 80 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை, பௌா்ணமி நாள்களிலும... மேலும் பார்க்க

காவலாளி கொலை வழக்கில் ஒருவா் கைது

தூத்துக்குடியில் காவலாளியை கட்டையால் அடித்துக் கொன்ற வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு மேலத் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் சந்திரன் (55). இவா... மேலும் பார்க்க