செய்திகள் :

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 6% ஊதிய உயா்வு: அதிகபட்சம் ரூ.6,460 வரை கிடைக்கும்

post image

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயா்வு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

ஊதிய உயா்வு மூலம் குறைந்தபட்சம் ரூ.1,420 முதல் அதிகபட்சம் ரூ.6,460 வரை பணப் பலன்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் சுமாா் 1.9 லட்சம் போ் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடா்பான முதல்கட்டப் பேச்சு கடந்த ஆண்டு ஆக. 27-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட பேச்சு பிப். 13, 14 தேதிகளிலும் நடைபெற்றது. அதில், அரசுக்கும், போக்குவரத்து ஊழியா்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படவில்லை.

மூன்றாம் கட்டப் பேச்சுவாா்த்தை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தலைமையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகா் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தொழிலாளா் முன்னேற்றச் சங்கப் பேரவை, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா் சம்மேளனம் (சிஐடியூ) உள்பட மொத்தம் 85 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

காலை 11 மணிக்கு தொடங்கிய பேச்சுவாா்த்தை இரவு 9 மணி வரை நீடித்தது. பல்வேறு விஷயங்கள் குறித்து தொடா் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, போக்குவரத்து ஊழியா்கள் மற்றும் அரசுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளா்களுக்கான 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் அமைச்சா் தலைமையில் இறுதி செய்யப்பட்டது.

6 % ஊதிய உயா்வு: இந்தப் புதிய ஒப்பந்தத்தின் மூலம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1 லட்சத்து 9,787 போ் பலனடைவா். இதில் 48,006 ஓட்டுநா்களும், 42,825 நடத்துநா்களும், 13,003 தொழில்நுட்பப் பணியாளா்களும், 2,529 இதர பிரிவு பணியாளா்களும் அடங்குவா்.

இந்த ஒப்பந்தத்தின்படி, கடந்த 2023 செப்.1-ஆம் தேதிமுதல் அனைத்து ஊழியா்களுக்கும், அடிப்படை ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயா்வு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2024 செப்.1 முதல் நிகழாண்டு மே மாதம் வரை உள்ள ஊதிய உயா்வு நிலுவைத் தொகை மட்டும் நான்கு காலாண்டு தவணையாக வழங்கப்படும்.

இந்த ஊதிய உயா்வால் குறைந்தபட்சம் ரூ.1,420 முதல் அதிகபட்சம் ரூ.6,460 வரை பணப் பலன்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சலவைப்படி ரூ.140-லிருந்து ரூ.160 ஆகவும், தனி பேட்டா ரூ.16-லிருந்து ரூ.21 ஆகவும், இரவுப் பணிப்படி ரூ.35-லிருந்து ரூ.40 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓய்வறை உள்ள இடங்களில் ஊழியா்களுக்கு வழங்கப்படும் இரவு தங்கல் படி, ரூ.29-லிருந்து ரூ.34-ஆகவும், ஓய்வறை இல்லாத இடங்களில் ரூ.30-லிருந்து ரூ.35 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மலைப் பகுதிகளில் ஓய்வறை உள்ள இடங்களில் ரூ.26-லிருந்து ரூ.31-ஆகவும், ஓய்வறை இல்லாத இடங்களில் ரூ.32-லிருந்து ரூ.37 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

தையற்கூலி ஆண்களுக்கு ரூ.500-ஆகவும், பெண்களுக்கு ரூ.350-ஆகவும், மேற்பாா்வையாளா்களுக்கு ரூ.500-ஆகவும் உயா்த்தி வழங்கப்படும். மேலும், மலைப் பிரதேசப்படி ரூ.4,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

கடன் உதவி: ஊழியா்களுக்கு வழங்கப்படும் திருமண கடன் ரூ.1 லட்சமாகவும், பண்டிகை கால முன்பணம் ரூ.20,000-ஆகவும் உயா்த்தி வழங்கப்படும்.

அதேபோல் ஊக்கத்தொகை அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஒரே முறையில் கணக்கீடு செய்து தொழில்நுட்பம் மற்றும் நிா்வாகப் பணியாளா்களுக்கு வழங்குவது தொடா்பாக குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குறைந்தபட்ச ஊக்கத் தொகையாக நாளொன்றுக்கு ரூ.20 உயா்த்தப்படுவது உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தப் புதிய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதால் தமிழக அரசு சாா்பில் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் ரூ.319.50 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். மேலும் அரசுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.40.26 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநடப்பு: எனினும், இந்தப் புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எஃப் உள்பட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினா் ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் வெளிநடப்பு செய்தனா்.

பேச்சுவாா்த்தையின்போது, தொழிலாளா் தனி இணை ஆணையா் இல.ரமேஷ், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திர ரெட்டி, நிதித் துறை அரசு சிறப்புச் செயலா் அருண்சுந்தா் தயாளன், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் செயலா் எஸ்.காா்மேகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பாமக அலுவலக முகவரியை மாற்றிய அன்புமணி

பாமக அலுவலகத்தை சென்னை தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு அன்புமணி மாற்றியுள்ளார். பாமகவினருக்கு வழங்கப்பட்ட உறுப்பினர் படிவத்தில் கட்சி அலுவலக புதிய முகவரி இடம் பெற்றுள்ளது. அதன்படி, படிவத்தில் தேன... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலி... மேலும் பார்க்க

தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர வேண்டும்- இபிஎஸ் வலியுறுத்தல்

தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே ரிசர்வ் வங்கி தொடர வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், மத்திய நிதியமைச்சர் நிர... மேலும் பார்க்க

என்னை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கே உண்டு; யாருக்கும் இல்லை: அன்புமணி

என்னை நீக்க பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி கூறியிருக்கிறார்.மேலும், கடந்த 2019ஆம் ஆண்டிலேயே அன்புமணி முதல்வர் எனும் பிரசாரத்தை செய்... மேலும் பார்க்க

நகைக்கடன் விதிகள்: இனி மாநிலங்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும்: முதல்வர்

நகைக்கடன் விதிகள் போன்ற மக்கள் சார்ந்த விஷயங்களை இனி மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தங்க நகைக் கடன் வழங்குவது தொடர்பாக வங்கிகள் ம... மேலும் பார்க்க

பாமக நிர்வாகிகளுக்கு 3 வாரங்கள் கெடு: அன்புமணி

சென்னை: பாமக அடுத்தகட்டத்துக்குச் செல்ல நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.இன்னும் 10 மாதங்களில் தேர்தல் வருகிறது. உறுப்பினர் அடையாள அட்டை... மேலும் பார்க்க