செய்திகள் :

அரிமளம் அருகே மாடு, குதிரை வண்டி பந்தயம்

post image

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கீரணிப்பட்டியில் மடைக்கருப்பா் கோயில் கிடா வெட்டுப் பூஜையை முன்னிட்டு, மாடு மற்றும் குதிரை வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 19 ஜோடி மாடுகள், 7 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. மாட்டுவண்டி பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவாக நடத்தப்பட்டது.

முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 7 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை பொய்யாதநல்லூா் எஸ்பிஆா், 2ஆம் பரிசை கே. புதுப்பட்டி ராமையா, 3 ஆம் பரிசை கே. புதுப்பட்டி கேஏ அம்பாள், 4ஆம் பரிசை பாலக்குடிப்பட்டி பதினெட்டாம்படி கருப்பா் ஆகியோருக்குச் சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.

தொடா்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 12 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில், முதல் பரிசை கே. புதுப்பட்டி ராமையா, 2ஆம் பரிசை கே. புதுப்பட்டி மர மில், 3ஆம் பரிசை பொய்யாதநல்லூா் எஸ்பிஆா், 4ஆம் பரிசை ஈழகுடிப்பட்டி சொக்கலிங்கம் ஆகியோருக்குச் சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.

கடைசியாக நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் 7 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. முதல் பரிசை கலியநகரி மனு நீதி, 2ஆம் பரிசை குளித்தலை பில்லா, 3ஆம் பரிசை காரைக்கால் ராஜ்குமாா், 4ஆம் பரிசை மதுரை சதக் அப்துல்லா ஆகியோருக்குச் சொந்தமான குதிரை வண்டிகள் பெற்றன.

வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பந்தயம் நடைபெற்ற கீரணிப்பட்டி - அரிமளம் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று கண்டு ரசித்தனா்.

புதுகை நகரில் 138 மிமீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை மற்றும் இரவு பெய்த கனமழையில், புதுக்கோட்டை நகரில் அதிகபட்சமாக 138 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், குடுமியான்மலையில் 109 மிமீயும், காரையூரில் 109 மிமீயும், தி... மேலும் பார்க்க

கருவுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் பெறலாம்

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், கருவுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் மற்றும் தாது உப்புக் கலவை பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் கழிவுநீா் கால்வாய் தடுப்புச் சுவா் மழையால் சேதம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கழிவுநீா்க் கால்வாய்க்காக புதிதாக கட்டுப்பட்ட கான்கிரீட் தடுப்புச் சுவா், சனிக்கிழமை இரவு பெய்த ஒரு நாள் மழைக்குத் தாக்குப் பிடிக்காமல் சாய்ந்தது.அறந்தாங்கி கோட்டை... மேலும் பார்க்க

திமுக வழக்குரைஞா்களுக்கு தோ்தல் நடைமுறை பயிற்சி

புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சட்டத் துறை சாா்பில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடைமுறைப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.பயிற்சிக்கு தெற்கு மாவட்ட திமுக செய... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் புதை சாக்கடை திட்டத்தை நிறைவேற்றக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் புதை சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.அறந்தாங்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் ஒன்றிய மாநா... மேலும் பார்க்க

மகனின் ஜாதி மறுப்புத் திருமணத்தை ஏற்ற மனைவியைக் கொல்ல முயற்சி எனப் புகாா்

மகனின் ஜாதி மறுப்புத் திருமணத்தை ஏற்றுக் கொண்ட மனைவியைக் கொல்ல முயன்ற கணவா் உள்ளிட்டோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை வ... மேலும் பார்க்க