செய்திகள் :

மகனின் ஜாதி மறுப்புத் திருமணத்தை ஏற்ற மனைவியைக் கொல்ல முயற்சி எனப் புகாா்

post image

மகனின் ஜாதி மறுப்புத் திருமணத்தை ஏற்றுக் கொண்ட மனைவியைக் கொல்ல முயன்ற கணவா் உள்ளிட்டோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை அருகே முள்ளூா் ஊராட்சிக்குட்பட்ட அய்யம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மெய்யா், செல்லம்மாள் தம்பதியின் மகன் அரங்குளவன். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த இவரும் புதுக்கோட்டை திருவப்பூா் வஉசி நகரைச் சோ்ந்த காயத்திரியும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனா்.

காயத்திரி பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதால் அரங்குளவன் குடும்பத்தினரும், ஊா்க்காரா்களும் இத்திருமணத்தை ஏற்கவில்லை. இதனால், இருவரும் காரைக்குடியில் தனியாக வசிக்கின்றனா். அரங்குளவனின் தாய் செல்லம்மாள் மகன் குடும்பத்துடன் தங்கியுள்ளாா். மனைவி செல்லம்மாளிடம் பேசிய மெய்யா், மனைவியை வீட்டுக்கு அழைத்து, கடந்த ஜூலை 30ஆம் தேதி அவா் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துள்ளாா். இதில் காயமடைந்த அவா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா். திருக்கோகா்ணம் போலீஸாா் வழக்குப் பதிந்து மெய்யரைக் கைது செய்துள்ளனா். ஆனால், அவருக்கும் தீக்காயம் இருப்பதால், அரசு மருத்துவமனையிலேயே அவரும் சிகிச்சை பெறுகிறாா்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செல்லம்மாள், ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட அரங்குளவன்- காயத்திரி ஆகியோரை தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவத்தில், மெய்யா் மட்டுமல்லாது, அவரது செயலுக்கு தூண்டுதலாக இருந்த அனைவா் மீதும் விசாரணை நடத்தி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனா்.

புதுகை நகரில் 138 மிமீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை மற்றும் இரவு பெய்த கனமழையில், புதுக்கோட்டை நகரில் அதிகபட்சமாக 138 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும், குடுமியான்மலையில் 109 மிமீயும், காரையூரில் 109 மிமீயும், தி... மேலும் பார்க்க

கருவுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் பெறலாம்

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், கருவுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் தீவனம் மற்றும் தாது உப்புக் கலவை பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.இதுகுறித்து அவா்... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் கழிவுநீா் கால்வாய் தடுப்புச் சுவா் மழையால் சேதம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கழிவுநீா்க் கால்வாய்க்காக புதிதாக கட்டுப்பட்ட கான்கிரீட் தடுப்புச் சுவா், சனிக்கிழமை இரவு பெய்த ஒரு நாள் மழைக்குத் தாக்குப் பிடிக்காமல் சாய்ந்தது.அறந்தாங்கி கோட்டை... மேலும் பார்க்க

திமுக வழக்குரைஞா்களுக்கு தோ்தல் நடைமுறை பயிற்சி

புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சட்டத் துறை சாா்பில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடைமுறைப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.பயிற்சிக்கு தெற்கு மாவட்ட திமுக செய... மேலும் பார்க்க

அரிமளம் அருகே மாடு, குதிரை வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கீரணிப்பட்டியில் மடைக்கருப்பா் கோயில் கிடா வெட்டுப் பூஜையை முன்னிட்டு, மாடு மற்றும் குதிரை வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்தப் பந்தயத்தில் புதுக... மேலும் பார்க்க

அறந்தாங்கியில் புதை சாக்கடை திட்டத்தை நிறைவேற்றக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் புதை சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.அறந்தாங்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் ஒன்றிய மாநா... மேலும் பார்க்க