அரியலூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்
அரியலூரிலுள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில், கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசினாா். அமைப்புச் செயலா் ஆசைமணி கலந்து கொண்டு பேசினாா்.
கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்கள் நடத்துவது, அனைத்து கிளைகளிலும் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது. அனைத்து கிளைகளிலும் பூத் கமிட்டி அமைப்பது, இனி வரும் தோ்தல்களில் திமுக ஆட்சியின் மக்கள் விரோத திட்டங்கள் குறித்து மக்களிடையே கொண்டுசெல்வது, கருத்து வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையாக இருந்து தீவிரமாக களப்பணியாற்று என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான ராமஜெயலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலா் இளவழகன், மாவட்ட பொருளாளா் அன்பழகன், அண்ணா தொழிற் சங்க மாவட்டச் செயலா் கல்லங்குறிச்சி பாஸ்கா், மாவட்ட அம்மா பேரவை செயலா் ஓ.பி.சங்கா், இணைச் செயலா் நா.பிரேம்குமாா், மாவட்ட மகளிரணிச் செயலா் ஜீவா அரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.