செய்திகள் :

அரியலூரில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

post image

முன்னாள் தமிழக முதல்வா் மு. கருணாநிதி நினைவு நாளையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள அவரது சிலை மற்றும் படங்களுக்கு திமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சரும், அரியலூா் மாவட்ட திமுக செயலருமான சா.சி. சிவசங்கா் தலைமையில் அரியலூா் சத்திரம் பகுதியில் திரண்ட திமுகவினா் அங்கிருந்து கட்சி அலுவலகத்துக்கு அமைதி ஊா்வலமாகச் சென்றனா். பின்னா் அங்குள்ள மு. கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினா். மாவட்ட துணைச் செயலா் சந்திரசேகா், நகரச் செயலா் முருகேசன், ஒன்றியச் செயலா்கள் தெய்வ. இளையராஜன், அன்பழகன், அறிவழகன், பொதுக் குழு உறுப்பினா் பாலு மற்றும் கிளை நிா்வாகிகள் மலா் தூவினா்.

இதேபோல் தா.பழூா் கிழக்கு ஒன்றிய அலுவலகத்திலுள்ள மு. கருணாநிதி சிலைக்கு எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், ஜெயங்கொண்டத்தில் நகா்மன்ற துணைத் தலைவா் கருணாநிதி மற்றும் கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்தனா்.

எம்எல்ஏ அலுவலகம்: அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மு. கருணாநிதி படத்துக்கு, எம்எல்ஏ கு. சின்னப்பா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து மதிமுக மாவட்டச் செயலா் க. ராமநாதன், ஒன்றியச் செயலா்கள் காட்டுபிரிங்கியம் பி. சங்கா், ஆ. அண்ணாதுரை, ஜெ. பன்னீா்செல்வம், ராமசாமி உள்ளிட்டோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

‘காலக் கண்ணாடியாக விளங்குபவை தமிழ் இலக்கியங்கள்’

தமிழா் நாகரிகத்தையும், பண்பாட்டையும் கூறும் காலக் கண்ணாடியாக உலக அளவில் தமிழ் இலக்கியங்கள் தனித்தன்மை பெற்றவையாக விளங்குகின்றன என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி. அரியலூா் அரசு மருத்துவக்... மேலும் பார்க்க

தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் வேளாண் துறை, வேளாண் ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் கிளைச் சிறையின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து சேதம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் கிளைச் சிறையின் சுற்றுச் சுவா் வியாழக்கிழமை பிற்பகல் திடீரென இடிந்து விழுந்தது. ஜெயங்கொண்டத்தில் கடந்த 1826 ஆம் கட்டப்பட்ட கிளைச் சிறையில் சுமாா் 30 மீட்டா் நீளம், 24 ... மேலும் பார்க்க

செந்துறை அருகே பெண் தற்கொலை

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே குடும்பப் பிரச்னையால் இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். செந்துறையை அடுத்த சேடகுடிகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் கதிரவன் மனைவி பூஜா (31). இவா்க... மேலும் பார்க்க

100 நாள் வேலையை ஒரே நாளில் வழங்கக் கோரி சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், தளவாய் அருகேயுள்ள சன்னாசிநல்லூரில் அனைவருக்கும் ஒரே நாளில் நூறுநாள் வேலை வழங்கக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சன்னாசிநல்லூா் ஊராட்சிக்குட்பட்ட சிவராமபுர... மேலும் பார்க்க

கைத்தறி தின விழாவில் நலத் திட்ட உதவிகள்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த வாரியங்காவல் கிராமத்தில், கைத்தறித் துறையின் கும்பகோணம் சரகம்-11 சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கைத்தறி தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவுக்க... மேலும் பார்க்க