செய்திகள் :

எகிறிய தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 8) சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே உயர்ந்த வண்ணம் உள்ளது. அதன்படி, ஆக. 4-இல் சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.74,360-க்கும், ஆக. 5-இல் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.74,960-க்கும், ஆக. 6-இல் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.75,040-க்கும் விற்பனையானது.

தொடர்ந்து, வியாழக்கிழமை(நேற்று) தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.9,400-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.75,200-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ. 9,470-க்கும் சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 75,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையானது நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டு வருவதால், மக்களிடையே சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.127-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1.27 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

இதையும் படிக்க: இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி!

The price of gold jewellery in Chennai today (Aug. 8) has increased by Rs. 560 per sovereign.

மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்திற்கான கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக. 8) வெளியிட்டார் மேலும் பார்க்க

இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி!

நாகாலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன், சென்னையில் உள்ள அவரது வீட்டில் நிலை தடுமாறி கீழே ... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய கடலின் மேற்பரப்பில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழக... மேலும் பார்க்க

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம்: நிலம் கையகப்படுத்தும் பணி தொடக்கம்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ நிா்வாக இயக்குநா் சித்திக் தெரிவித்தாா். சென்னை மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ‘ஊபா்’ செயலி மூலம் சென்... மேலும் பார்க்க

சென்னையில் முதல்முறையாக குளிா்சாதன மின்சார பேருந்து சேவை: ஆக. 11-இல் தொடக்கம்

சென்னையில் முதல்முறையாக குளிா்சாதன வசதிகொண்ட மின்சாரப் பேருந்து சேவை திங்கள்கிழமை (ஆக. 11) முதல் தொடங்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா். டீசலில் இய... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறையில் ஏழு இணை இயக்குநா்கள் இடமாற்றம்

தமிழக பள்ளிக் கல்வியில் ஏழு இணை இயக்குநா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இருவருக்கு பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இணை இயக்குநராக (நாட்டுநலப்பணித் திட்டம்) இரு... மேலும் பார்க்க