செய்திகள் :

US: `இந்தியா எங்களுடைய முக்கிய கூட்டாளி; அது தொடரும்' - அமெரிக்க வெளியுறவுத் துறை என்ன சொல்கிறது?

post image

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரி பிளஸ் அபராத தொகை விதித்துள்ளார். இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட்டிடம் கேட்கப்பட்டது.

அமெரிக்க வெளியுறவுத் துறையின் பதில் என்ன?

அதற்கு அவர், "அமெரிக்க அதிபர் வர்த்தக பற்றாக்குறை மற்றும் இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து எங்களுடைய கருத்துகளைத் தெளிவாக கூறிவிட்டார்.

அதற்காக அவர் நேரடியாக இந்தியா மீது எடுத்த நடவடிக்கை எடுத்ததைப் பார்த்திருப்பீர்கள்.

இந்தியா எங்களுடைய முக்கியமான கூட்டாளி. அதனால், அவர்களிடம் முழுமையான மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம். அது தொடரும்." என்று பதிலளித்துள்ளார்.

டாமி பிகாட்
டாமி பிகாட்

வரியின் பின்னணி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இந்தியா மீது 25 சதவிகித வரியையும், ரஷ்யா உடன் வணிகம் செய்வதற்காக அபராதத்தையும் விதித்திருந்தார்.

ஆனால், தற்போது 25 சதவிகித வரியை 50 சதவிகிதமாக உயர்த்தி உள்ளார். இதற்கு இந்தியா ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தான் காரணம் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் தான், இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று டாமி பிகாட் கூறியிருக்கிறார். இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில் வரி விகிதம் குறைக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

`போராடும் தூய்மை தொழிலாளர்களை அழைத்து பேச ஒரு அதிகாரி கூட இல்லை; இதுவா வளர்ச்சி?’ - சீமான் காட்டம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நெசவாளர் வாழ்வுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைமை ஒ... மேலும் பார்க்க

J&K: கடை கடையாக 25 புத்தகங்களைத் தேடும் காவல்துறை - ஜம்மு & கஷ்மீரில் என்ன நடக்கிறது?

ஜம்மு - காஷ்மீரின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்தது. முதல்வராகப் பதவியேற்ற ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீரை தனிமாநிலமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்து வர... மேலும் பார்க்க

`11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறை ரத்து' - மாநில கல்விக் கொள்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின்... மேலும் பார்க்க

உ.பி: "கங்கை ஆசீர்வதிக்க வீட்டுக்கு வந்திருக்கிறது" - வெள்ளம் குறித்த பேச்சுக்கு அமைச்சர் விளக்கம்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடந்த சில நாள்களாக கங்கை மற்றும் யமுனை நதிகளின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் குடியிருக்கும் பல்வேறு பகு... மேலும் பார்க்க

'NATION WANTS TO KNOW' ராகுல் முன்வைத்த குற்றச்சாட்டு - மோடிக்கு கேள்வி எழுப்பிய பிரகாஷ் ராஜ்

தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி ஆதாரத்துடன் வைத்த குற்றச்சாட்டுகள் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் அதிகளவில் வாக்காளர்கள் மோசடியாக இடம்பெற்றிருந்ததாக மக்... மேலும் பார்க்க

‘வரி மேல் வரி’: பூச்சாண்டி காட்டும் அமெரிக்கா... பலம் காட்டும் இந்தியா!

‘அமெரிக்காவை மீண்டும் கிரேட் ஆக்குவேன்’ என்ற முழக்கத்துடன் இரண்டாம் முறையாக அதிபர் ஆகியிருக்கும் ட்ரம்ப், ஆரம்பத்திலிருந்தே உலக அளவில் பரபரப்பைப் பற்றவைத்துக்கொண்டே இருக்கிறார். ஒரு சமயம் பார்த்தால்..... மேலும் பார்க்க