செய்திகள் :

உ.பி: "கங்கை ஆசீர்வதிக்க வீட்டுக்கு வந்திருக்கிறது" - வெள்ளம் குறித்த பேச்சுக்கு அமைச்சர் விளக்கம்

post image

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடந்த சில நாள்களாக கங்கை மற்றும் யமுனை நதிகளின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் குடியிருக்கும் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்திருக்கிறது.

இந்த நிலையில், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்ற உத்தரப்பிரதேச மீன்வளத்துறை அமைச்சர் சஞ்சய் நிஷாத் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசினார். அவர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையாகியிருக்கிறது.

சஞ்சய் நிஷாத்
சஞ்சய் நிஷாத்

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் கூடியிருந்த பெண்கள் குழுவிடம் அமைச்சர் சஞ்சய் நிஷாந்த், ``எதற்காகப் பயப்படுகிறீர்கள். கங்கை மாதா நதியாக உங்கள் கால்களைக் கழுவி சுத்தம் செய்ய உங்கள் வீட்டுக்கே வந்திருக்கிறாள். உங்களுக்கு கங்கை மாதாவின் ஆசீர்வாதம் கிடைத்திருக்கிறது. நீங்கள் நேரடியாக சொர்க்கம் செல்வீர்கள்" என்றார்.

அதற்குக் கூட்டத்திலிருந்த பெண் ஒருவர், ``கங்கையின் ஆசியை நீங்களே பெற்றுக்கொள்ளுங்கள்" எனப் பதிலளித்திருக்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.

இது தொடர்பாக அமைச்சர் சஞ்சய் நிஷாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ``நான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்றிருந்தேன். அப்போதுதான் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பாவத்தைப் போக்குவதற்காக கங்கை நதியை நோக்கி வருகிறார்கள். இங்கே கங்கா அவர்களின் வீட்டுக்கே வந்திருப்பது அற்புதமான உணர்வு என்றேன்.

எங்கள் வாழ்க்கையும், வாழ்வாதார ஆதாரமும் நதிகள்தான். நாங்கள் நதிகளை வணங்குகிறோம். எனவே என் கருத்துக்கு உள்ளூர் மத நம்பிக்கைகளின் பின்னணியும் உள்ளது" என விளக்கமளித்தார்.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

ஆனால், இவரின் கருத்து பொதுமக்களிடமிருந்தும், எதிர்க்கட்சிகளிடமிருந்தும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷர்வேந்திர பிக்ரம் சிங், ``வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் சூழ்நிலையை அவர் உணரவே இல்லை.

அமைச்சர்கள் எங்குப் புகைப்படம் எடுக்கலாம் என இடத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளத்தால் மக்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து கொண்டிருக்கும் நேரத்தில், இதுபோன்ற அறிக்கைகள் உத்தரப்பிரதேசத்தின் கள யதார்த்தம் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுகின்றன" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

J&K: கடை கடையாக 25 புத்தகங்களைத் தேடும் காவல்துறை - ஜம்மு & கஷ்மீரில் என்ன நடக்கிறது?

ஜம்மு - காஷ்மீரின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, சட்டமன்றத் தேர்தலும் நடந்து முடிந்தது. முதல்வராகப் பதவியேற்ற ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீரை தனிமாநிலமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்து வர... மேலும் பார்க்க

`11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறை ரத்து' - மாநில கல்விக் கொள்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின்... மேலும் பார்க்க

US: `இந்தியா எங்களுடைய முக்கிய கூட்டாளி; அது தொடரும்' - அமெரிக்க வெளியுறவுத் துறை என்ன சொல்கிறது?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரி பிளஸ் அபராத தொகை விதித்துள்ளார். இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட்டிடம் கேட்கப்பட்டது. அமெரிக்க... மேலும் பார்க்க

'NATION WANTS TO KNOW' ராகுல் முன்வைத்த குற்றச்சாட்டு - மோடிக்கு கேள்வி எழுப்பிய பிரகாஷ் ராஜ்

தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி ஆதாரத்துடன் வைத்த குற்றச்சாட்டுகள் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் அதிகளவில் வாக்காளர்கள் மோசடியாக இடம்பெற்றிருந்ததாக மக்... மேலும் பார்க்க

‘வரி மேல் வரி’: பூச்சாண்டி காட்டும் அமெரிக்கா... பலம் காட்டும் இந்தியா!

‘அமெரிக்காவை மீண்டும் கிரேட் ஆக்குவேன்’ என்ற முழக்கத்துடன் இரண்டாம் முறையாக அதிபர் ஆகியிருக்கும் ட்ரம்ப், ஆரம்பத்திலிருந்தே உலக அளவில் பரபரப்பைப் பற்றவைத்துக்கொண்டே இருக்கிறார். ஒரு சமயம் பார்த்தால்..... மேலும் பார்க்க

SHOCKING : ஒரே தொகுதியில் 1 Lakh Duplicate Voters - Rahul Gandhi | ECI BJP |Imperfect Show 7.8.2025

* இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்* “நம் நிலைப்பாட்டை சொல்லிவிட்டோம்” - ரன்தீர் ஜெய்ஸ்வால் * நிக்கி ஹேலி எதிர்ப்பு? * டிரம்புக்கு முதல்பதிலடி கொடுத்த பிரதமர் மோடி* சீனா, ஜப்பானுக்கு... மேலும் பார்க்க