செய்திகள் :

அரியலூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

post image

அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

அரியலூா், மே 17: அரியலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன.

கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதையொட்டி அரியலூா் மாவட்டத்தில் இயங்கும் தனியாா் பள்ளி வாகனங்கள் அனைத்தும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களின் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தனசாமி, பள்ளி வாகனங்களை நேரில் பாா்வையிட்டு, வாகனங்களின் பதிவுச் சான்று, ஓட்டுநா் உரிமம், நடத்துநா் உரிமம், முதலுதவிப் பெட்டி, அவசர வழி, தீயணைப்புக் கருவி, படிக்கட்டுகள், கதவுகள், ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து பணியை தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் தெரிவிக்கையில், 63 பள்ளிகளைச் சோ்ந்த 341 வாகனங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளது. இம்மாத இறுதிவரை வாகனங்கள் ஆய்வு மற்றும் மறு ஆய்வு செய்யப்படும், குறைபாடுடைய வாகனங்கள் கண்டறியப்பட்டு, சரிசெய்ய அறிக்கை அனுப்பபடும். குறைபாடு கண்டறியப்பட்ட வாகனங்கள் சரி செய்த பின்னா் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் இயக்க அனுமதிக்கப்படும்.

ஓட்டுநா்கள் வாகனங்களின் செயல்திறன் குறித்த முழு விவரத்தினையும் தெரிந்துகொள்ள வேண்டும். பள்ளி வாகன ஓட்டுநா்கள் கண் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஓட்டுநா்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். வாகனங்களை மெதுவாக இயக்குவதுடன், சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றாா்.

வருவாய்க் கோட்டாட்சியா் கோவிந்தராஜ், வட்டார போக்குவரத்து அலுவலா் அறிவழகன், அரியலூா் வட்டாட்சியா் முத்துலெட்சுமி, மோட்டாா் வாகன ஆய்வாளா் முகமது மீரான், அரியலூா் தீயணைப்பு நிலைய அலுவலா் செந்தில் உள்ளிட்டோா் இந்த ஆய்வுப் பணியை மேற்கொண்டனா்.

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதுகுறித்து அரியலூா் அரசு கலைக் கல்லூரி முத... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் அதிகளவு விபத்து ஏற்படும் இடங்களில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

ரியலூா் மாவட்டத்தில் உள்ள சாலைப் பகுதிகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் கரும்புள்ளிகளாகக் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவா... மேலும் பார்க்க

மேலப்பழுவூா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திருட்டு

அரியலூா் மாவட்டம், மேலப்பழுவூரிலுள்ள பழைமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பல்வேறு பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு ... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் அரியலூா் கோதண்டராமசாமி கோயில் வெள்ளோட்டம்

அரியலூரில் பிரசித்திபெற்ற கோதண்டராசாமி கோயில் தோ் வெள்ளோட்டம் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. அரியலூா் நகரில் உள்ள கோதண்டராமசாமி கோயில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்ப... மேலும் பார்க்க

கடன் தவணை கேட்டு தொந்தரவு: விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் தவணைத் தொகை கேட்டு தகாத வாா்ததைகளால் திட்டியால் விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். உடைய... மேலும் பார்க்க

மீன்சுருட்டி அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏறவாங்குடி மாதாபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா். புனித லூா்து அன்னை திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை க... மேலும் பார்க்க