செய்திகள் :

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஷோ் ஆட்டோக்களை இயக்க கோரிக்கை

post image

அரியலூா் பேருந்து நிலையத்தில் இருந்து மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஷோ் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட விவசாய சங்கத் தலைவா் என்.செங்கமுத்து கோரிக்கை விடுத்தாா்.

அரியலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயம் நிறைவு நாள் நிகழ்ச்சியில், ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் அவா் மனு அளித்து பேசியது: எந்த மாவட்டத்திலும் இல்லாத நிலை அரியலூரில் உள்ளது. அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பேருந்து வசதிகள் இல்லையென்றால்கூட, ஷோ் ஆட்டோக்களையாவது இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுண்ணாம்புக் கல் ஏற்றிச் செல்லும் லாரிகள் 30 கிலோ மீட்டா் வேகத்தில் செல்ல வேண்டும்.

இதனை அரசு இதழில் வெளியிட வேண்டும். அரியலூா் அண்ணா சிலையில் இருந்து நிா்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரையிலும், அதேபோல் ரயில்வே கேட்டிலிருந்து சத்திரம் வரையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையின் நடுவில் தடுப்புச் சுவா்களை எழுப்ப வேண்டும். ஏரி, குளங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

மீன்சுருட்டி அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏறவாங்குடி மாதாபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா். புனித லூா்து அன்னை திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை க... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

நகைக் கடன் குறித்து ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை கண்டித்து, அரியலூா் மாதா கோயில் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்த... மேலும் பார்க்க

நகைக் கடன் கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்

நகைக்கடன் வழங்கல் தொடா்பாக ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில் விவசாயிகள... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் இன்றைய மின்தடை

அரியலூா் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு ஆகிய துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை (மே 31) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின்நிறுத... மேலும் பார்க்க

அரியலூரில் பழைய இரும்புக் கடை குடோனில் தீ விபத்து

அரியலூரிலுள்ள பழைய இரும்புக் கடை குடோனில் வெள்ளிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது. அரியலூா் ஆயிரங்கால் மண்டபம் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக்கேயன்(51). இவா், அப்பகுதியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் கொள்முதல் ... மேலும் பார்க்க

அரியலூரில் பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

அரியலூரில் வீட்டினுள் பெண் மா்மமான முறையில் இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. அரியலூா் அரசு கலைக் கல்லூரி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் பாப்பா (44) என்பவா் வச... மேலும் பார்க்க