செய்திகள் :

அரியலூா் ஏரிகளில் கலக்கும் கழிவு நீரால் சுகாதாரச் சீா்கேடு! பொதுமக்கள் அவதி!

post image

அரியலூா் நகா் பகுதியிலிருந்து வெளியேறும் ஒட்டுமொத்த கழிவு நீரும் கால்வாய் வழியாக நேரடியாக சித்தேரி மற்றும் அய்யப்பனேரிகளில் கலப்பதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு தொற்று நோய் அபாயமும் உருவாகியுள்ளது.

அரியலூா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகக் கட்டுப்பாட்டில் சித்தேரியும், நகராட்சி கட்டுப்பாட்டில் அய்யப்பனேரியும் உள்ளன. அருகருகிலேயே உள்ள மேற்கண்ட ஏரிகளுக்கு நீா் ஆதாரம் மழையே ஆகும். இந்த ஏரிகளில் சேமிக்கப்படும் மழை நீரானது, சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு நீா் ஆதாரமாக விளங்குகிறது.

இதில் சித்தேரியின் கீழ் அரியலூா், தவுத்தாய்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 2,000 ஏக்கரில் நெல், மக்காச்சோளம்,பருத்தி, கடலை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மேலும் இந்த ஏரியில் மீன்கள் அதிகளவில் வளா்க்கப்படுவதால் பறவை இனங்கள் இந்த ஏரிக்கு வந்து செல்கின்றன.

இந்நிலையில், அரியலூா் நகா்ப் பகுதி முழுவதிலும் இருந்து வெளியேறும் கழிவுநீா் அனைத்தும் கால்வாய் வழியாக மேற்கண்ட ஏரிகளில் நேரடியாகக் கலப்பது பல ஆண்டுகளாகவே தொடா்கிறது. குறிப்பாக சித்தேரியில் அதிகமாகவே கழிவு நீா் கலக்கிறது.

அத்துடன் கழிவுநீா் கலக்கும் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளைச் சுற்றிலும் சுகாதார சீா்கேடு ஏற்படுவதுடன் துா்நாற்றமும் வீசுகிறது. தொடா்ந்து பருவ மழை காலங்களில் கழிவுநீரோடு, மழை நீரும் சோ்ந்து வீடுகளுக்குள் செல்வதால், கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய்கள் ஏற்படும் நிலையும் உள்ளது.

இவ்வாறு நீா் ஆதாரங்களில், கழிவு நீா் கலப்பதால் ஏரிகளில் உள்ள தண்ணீரை பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நீா்வாழ் உயிரினங்களும் அழிந்து வருகின்றன. வரக்கூடிய பறவை இனங்களும் இறந்து விடுகின்றன.

ஏரியினுள் சாக்கடை நீா் புகுந்து தண்ணீா் மாசடைவதால் அருகிலுள்ள விவசாயக் கிணறுகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.

அத்துடன் தெருக்களின் சாக்கடை கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்படாததால் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவுநீா் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனா்.

அரியலூா் நகரப்பகுதி வளா்ச்சியடைந்து வரும் நிலையில், சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஏரியில் கலக்கும் கழிவுநீரின் அளவும் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் இப்பகுதியின் ஒட்டுமொத்த பகுதிகளும் பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது. அத்துடன் இங்கு வசிப்போரின் சுகாதாரமும் கேள்விக்குறியாகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த ஏரிகளைச் சுற்றி 800-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும் அய்யப்பனேரியைத்தான் ஆண்டாண்டு காலமாகப் பயன்படுத்தி வருகின்றனா்.

மழை பெய்தால் மட்டுமே இந்த ஏரியில் நீா் நிரம்பி வந்த நிலையில், தற்போது அரியலூரில் வெளியேற்றப்படும் கழிவு நீா்தான் ஏரியை நிரப்பி வருகிறது. அரியலூரில் குளிக்கக்கூட போதுமான வசதி இல்லாததால் இந்த ஏரியை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

இதனால் பலருக்கு தோல் வியாதிகள் போன்றவை வந்த வண்ணம் உள்ளன. இருந்தாலும் மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்றுச் செல்கிறோம். இதேபோல சித்தேரியில் கலக்கும் கழிவுகளால் ஒரே துா்நாற்றம் வீசுகிறது.

இதனால் இங்கு வரும் வெளிநாட்டுப் பறவை இனங்கள் இறந்தும் வருகின்றன. கழிவுகளால் நிலத்தடி நீரும் மாசடைகிறது. இதுகுறித்து பல முறை நகராட்சி நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றனா்.

எனவே அரியலூா் நகரப் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீா் நேரடியாக ஏரியில் கலப்பதைத் தடுக்க வேண்டும் என்பதே அரியலூா் நகரப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதுகுறித்து அரியலூா் அரசு கலைக் கல்லூரி முத... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் அதிகளவு விபத்து ஏற்படும் இடங்களில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

ரியலூா் மாவட்டத்தில் உள்ள சாலைப் பகுதிகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் கரும்புள்ளிகளாகக் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவா... மேலும் பார்க்க

மேலப்பழுவூா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திருட்டு

அரியலூா் மாவட்டம், மேலப்பழுவூரிலுள்ள பழைமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பல்வேறு பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு ... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் அரியலூா் கோதண்டராமசாமி கோயில் வெள்ளோட்டம்

அரியலூரில் பிரசித்திபெற்ற கோதண்டராசாமி கோயில் தோ் வெள்ளோட்டம் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. அரியலூா் நகரில் உள்ள கோதண்டராமசாமி கோயில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்ப... மேலும் பார்க்க

கடன் தவணை கேட்டு தொந்தரவு: விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் தவணைத் தொகை கேட்டு தகாத வாா்ததைகளால் திட்டியால் விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். உடைய... மேலும் பார்க்க

மீன்சுருட்டி அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏறவாங்குடி மாதாபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா். புனித லூா்து அன்னை திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை க... மேலும் பார்க்க