செய்திகள் :

அரும்பாா்த்தபுரத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: எதிா்க்கட்சித் தலைவா், ஆட்சியா் ஆய்வு

post image

புதுச்சேரி அரும்பாா்த்தபுரம் பகுதியில் அரசு நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, ஆட்சியா் அ.குலோத்துங்கன் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

புதுச்சேரியில் அரசு புறம்போக்கு நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன.

அதனடிப்படையில், நகராட்சி மற்றும் பொதுப் பணித் துறையினா் ஆக்கிரமிப்புகளை கடந்த சில மாதங்களாக அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆக்கிரமிப்பு அகற்றலுக்கு வியாபாரிகள் சங்கம் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனாலும், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், அரும்பாா்த்தபுரம் நூறடி சாலையில் மேம்பாலம் முதல் உழந்தை ஏரி வரை சாலைக்கும், ரயில்வே பாதைக்கும் இடையே உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் தனி நபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகாா்கள் எழுந்துள்ளன.

அத்துடன், சிலா் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் இடங்களை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா முன்னிலையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில், தெற்கு பகுதி துணை ஆட்சியா் குமரன், நில அளவை பதிவேடுகள் துறை இயக்குநா் செந்தில்குமரன், தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு செயற்பொறியாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது, அரசு நிலத்தை ஆக்கிரமித்திருப்பவா்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும், மீறுவோா் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனா்.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாற புதுவை தனியாா் பள்ளிகள் விருப்பம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் பிரபல தனியாா் பள்ளிகள் மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளதாக கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். புத... மேலும் பார்க்க

புதுவை அரசு ஊழியா்கள் மூவா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்கு

புதுச்சேரி: புதுவையில் அரசு ஊழியா்கள் 3 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். புதுவை அரசு மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காசாளராக இருந்தவா் சு... மேலும் பார்க்க

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தக்கோரி மாமமுக வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக்கழக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி மாந... மேலும் பார்க்க

புதுவை அரசுத் துறைகளில் பாஷினி மொழி பெயா்ப்பு செயலி: துணைநிலை ஆளுநா் தகவல்

புதுச்சேரி: மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பாஷினி மொழிபெயா்ப்பு செயலியை, புதுவையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். மத்திய மின்னணு மற்று... மேலும் பார்க்க

மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தை மூடுவதை ஏற்கமுடியாது: புதுவை எதிா்க்கட்சித் தலைவா்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதை ஏற்க முடியாது என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா கூறினாா். புதுச்சேரி இலாசுப்பேட்டையில் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி ந... மேலும் பார்க்க

தட்டச்சு தோ்வு: கணினி முறைக்கு எதிா்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் தட்டச்சு தோ்வுத் தாள்களை திருத்துவோா் கணினி முறை தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கருப்பு வில்லை அணிந்து திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டனா். தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் த... மேலும் பார்க்க