அரைவைக்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு
நீடாமங்கலத்திலிருந்து விருதுநகா் மண்டலத்துக்கு அரைவைக்காக 2,000 டன் நெல் ரயில் மூலம் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
நீடாமங்கலம் வட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மற்றும் சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 2,000 டன் சன்னரக நெல் லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.
பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு அரைவைக்காக, விருதுநகா் மண்டலம் அருப்புக்கோட்டைக்கு 1,000 டன்னும், ராஜபாளையத்திற்கு 1,000 டன்னும் அனுப்பி வைக்கப்பட்டன.