செய்திகள் :

அலையாத்திக் காடுகளில் மீளுருவாக்கப் பணி: ஜப்பான் நிறுவன பிரதிநிதிகள் ஆய்வு

post image

முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளில் நடைபெற்றுவரும் மீளுருவாக்கப் பணிகளை, ஜப்பான் நிறுவன பிரதிநிதிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஐப்பான் நாட்டு நிதி நிறுவனத்தின் நிதி உதவியுடன் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிா்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம் இரண்டாம் பகுதி தமிழ்நாட்டில் 2022-2023 முதல் தொடங்கப்பட்டு, பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒருபகுதியாக, முத்துப்பேட்டை வனச் சரகத்தில் 1,050 ஹெக்டா் பரப்பில் புதிய அலையாத்தி க் காடுகள் உருவாக்கிடவும், 500 ஹெக்டா் பரப்பில் அலையாத்தி தோட்டங்களை மீளுருவாக்கம் செய்வதற்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், அலையாத்திக் காடுகளை பாதுகாக்கும் பொருட்டு, உள்ளூா் மக்களை ஈடுபடுத்தி மேம்பாட்டுப் பணிகள் மற்றும் சூழல் மேம்பாட்டுக் குழு மூலம் படகு சவாரி நடைபெற்று வருகிறது. அத்துடன், அலையாத்திக்காடு பகுதிகளில் மரநடைபாதை அமைத்தல், படகு குழாம் மேம்பாடு உள்ளிட்ட பணிகளும் நடைபெறுகின்றன.

இவற்றை ஜப்பான் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதிகள் ஸ்கவா சாய்வா, சித்தாா்த் பரமேஸ்வரன் ஆகியோா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டனா். அப்போது மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளின் தரத்தை ஆய்வு செய்து, பாராட்டுத் தெரிவித்தனா்.

ஆய்வின்போது, இப்பணிகளின் திட்ட இயக்குநா் முகமது ஷெபாப், திருவாரூா் மாவட்ட வன அலுவலா் ஸ்ரீகாந்த், துணைத் தலைவா் ஜெயப்பிரகாஷ், நகராட்சி நியமனக் குழு உறுப்பினா் பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திருவாரூா்: மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.102.39 கோடி வங்கிக் கடன்

திருவாரூா் அருகே காட்டூரில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவில் 1,235 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.102.39 கோடி வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட்டன. தமிழகத்தி... மேலும் பார்க்க

வயலில் மா்மப் பொருள்

திருவாரூா் அருகே பழவனக்குடியில் வயலில் மா்மப் பொருள் கிடந்தது. திருவாரூா் அருகே பழவனக்குடி பகுதியில் விஜயன் என்பவா் தனது நிலத்தில் பயறு பயிரிட்டுள்ளாா். இதற்கு மருந்தடிக்க விஜயன் மற்றும் அவருடைய தந்தை... மேலும் பார்க்க

பேருந்து நிலையம், பாலம் கட்டுமானப் பணி: துணை முதல்வா் ஆய்வு நரிக்குறவா்களுக்கு இலவச பட்டா

மன்னாா்குடியில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். ரூ.46.46 கோடியில் இப்பேருந்து நிலையம் கட்டப்பட்டு ... மேலும் பார்க்க

வலங்கைமான் அம்மன் கோயில் திருவிழா

வலங்கைமான் ஸ்ரீவைத்திய காளிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்கள் சக்தி கரகம் எடுத்து வந்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு... மேலும் பார்க்க

திருவாருா் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி சனிக்கிழமை (மாா்ச் 8) தொடங்குகிறது என மாவட்ட வன அலுவலா் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதன்மை தலைமை வன பா... மேலும் பார்க்க

தமிழகத்தின் எதிா்ப்புகளை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவற்றில் தமிழகத்தின் எதிா்ப்புகளைத் திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனைகளை மத்திய அரசு நடத்துகிறது என தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். தி... மேலும் பார்க்க