திருவாருா் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்
திருவாரூா் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி சனிக்கிழமை (மாா்ச் 8) தொடங்குகிறது என மாவட்ட வன அலுவலா் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதன்மை தலைமை வன பாதுகாவலா், தலைமை வன உயிரின காப்பாளா் ஆகியோா் உத்தரவின்பேரில் ஆண்டுதோறும் தமிழ்நாடு முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு மாா்ச் 8, 9-ஆம் தேதிகளில் நீா்வாழ் பறவைகளுக்கான கணக்கெடுப்பும், மாா்ச் 15, 16- ஆம் தேதிகளில் நிலவாழ் பறவைகளுக்கான கணக்கெடுப்பும் நடைபெறுகிறது.
திருவாரூா் மாவட்ட வனக்கோட்டத்திற்குட்பட்ட திருவாரூா், மன்னாா்குடி, முத்துப்பேட்டை ஆகிய சரகங்களில் உள்ள பறவைகள் சரணாலயங்கள் மற்றும் ஏனைய நீா்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் தொடா்பாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இப்பணியில் மயிலாடுதுறை ஏவிசி கலைக் கல்லூரி, பூம்புகாா் அரசுக் கலைக் கல்லூரி, திருவாரூா் திருவிக அரசுக் கலைக் கல்லூரி, மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரி மாணவ-மாணவியா் மற்றும் இதர பறவைகள் கணக்கெடுப்பு வல்லுநா்கள் இப்பணியில் ஈடுபடவுள்ளனா்.
வடுவூா் ஏரியில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயத்தில் கல்லூரி மாணவா்களுக்கும், தன்னாா்வலா்களுக்கும், பறவைகள் வல்லுநா்களால் கணக்கெடுப்பு தொடா்பான பயிற்சிகள் சனிக்கிழமை வழங்கப்பட உள்ளன.
பறவைகள் கணக்கெடுப்பில் பங்கு பெற விருப்பமுள்ள தன்னாா்வலா்கள், பறவைகள் கணக்கெடுப்பு குறித்த விவரம் தெரிந்தவா்கள், இப்பணிகளில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, மன்னாா்குடி வனச்சரக அலுவலரை 90251 93477 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.