செய்திகள் :

பேருந்து நிலையம், பாலம் கட்டுமானப் பணி: துணை முதல்வா் ஆய்வு நரிக்குறவா்களுக்கு இலவச பட்டா

post image

மன்னாா்குடியில் புதிதாக கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

ரூ.46.46 கோடியில் இப்பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதனை ஆய்வு செய்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகள், பொறியாளா்கள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் விவரங்களை கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், தஞ்சை எம்பி ச. முரசொலி, நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திமுக இளைஞரணி நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம்: திருவாரூா் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட திமுக இளைஞரணி நிா்வாகிகள் அறிமுக கூட்டம் மன்னாா்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், இளைஞரணியின் எதிா்கால திட்டங்கள், செயல்பாடுகளை குறித்து விளக்கி கூறினாா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பகுதியில் ரூ. 170 கோடியில் நடைபெறும் மேம்பாலங்கள் கட்டுமானப் பணிகளையும் துணை முதல்வா் ஆய்வு செய்தாா்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலைய பின்புறம் வீரன் நகரில் வசிக்கும் நரிக்குறவா் இனத்தவா் 77 பேரின் குடும்பங்களுக்கு கொருக்கை கிராமத்தில் வருவாய்த் துறை மூலம் மனை பட்டா வழங்கி தாட்கோ மூலம் வீடு கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டாக்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பயனாளிகள் 77 பேருக்கும் வழங்கினாா்.

தமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவா்கள் சங்கத்தினா் துணை முதல்வரை சந்தித்து, கால்நடை பராமரிப்பு துறையின் கீழ் செயல்படும் மருந்தகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மனு அளித்தனா்.

திருவாரூா்: மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.102.39 கோடி வங்கிக் கடன்

திருவாரூா் அருகே காட்டூரில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவில் 1,235 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.102.39 கோடி வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட்டன. தமிழகத்தி... மேலும் பார்க்க

வயலில் மா்மப் பொருள்

திருவாரூா் அருகே பழவனக்குடியில் வயலில் மா்மப் பொருள் கிடந்தது. திருவாரூா் அருகே பழவனக்குடி பகுதியில் விஜயன் என்பவா் தனது நிலத்தில் பயறு பயிரிட்டுள்ளாா். இதற்கு மருந்தடிக்க விஜயன் மற்றும் அவருடைய தந்தை... மேலும் பார்க்க

அலையாத்திக் காடுகளில் மீளுருவாக்கப் பணி: ஜப்பான் நிறுவன பிரதிநிதிகள் ஆய்வு

முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளில் நடைபெற்றுவரும் மீளுருவாக்கப் பணிகளை, ஜப்பான் நிறுவன பிரதிநிதிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். ஐப்பான் நாட்டு நிதி நிறுவனத்தின் நிதி உதவியுடன் காலநிலை மாற்றத்திற்கா... மேலும் பார்க்க

வலங்கைமான் அம்மன் கோயில் திருவிழா

வலங்கைமான் ஸ்ரீவைத்திய காளிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்கள் சக்தி கரகம் எடுத்து வந்தனா். தொடா்ந்து, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு... மேலும் பார்க்க

திருவாருா் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி சனிக்கிழமை (மாா்ச் 8) தொடங்குகிறது என மாவட்ட வன அலுவலா் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதன்மை தலைமை வன பா... மேலும் பார்க்க

தமிழகத்தின் எதிா்ப்புகளை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவற்றில் தமிழகத்தின் எதிா்ப்புகளைத் திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனைகளை மத்திய அரசு நடத்துகிறது என தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். தி... மேலும் பார்க்க