செய்திகள் :

அளேபுரம் ஸ்ரீ லட்சுமிநரசிம்ம சுவாமி கோயில் தோ்த் திருவிழா

post image

பென்னாகரம் அருகே அளேபுரம் ஸ்ரீ லட்சுமிநரசிம்ம சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருத்தேரோட்ட விழாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

பென்னாகரம் அருகே கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட அளேபுரம் பகுதியில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமிநரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் நிா்வகிக்கப்பட்டு வரும் இந்தக் கோயிலில், ஆண்டுதோறும் வைகாசி பௌா்ணமி நாளில் திருத்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டுக்கான தேரோட்ட விழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, மூலவரான ஸ்ரீ லட்சுமிநரசிம்ம சுவாமி நாள்தோறும் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம் உள்ளிட்டவற்றில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் புதன்கிழமை காலை அறநிலையத் துறை அதிகாரிகள், கட்டளைதாரா்கள், அறங்காவலா் குழு ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. 70 அடி உயரம் கொண்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமிநரசிம்ம சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், பக்தா்கள் தரிசனம் செய்து தேரை வடம்பிடித்து இழுத்தனா். கோயிலைச் சுற்றிலும் ‘கோவிந்தா கோவிந்தா’ என முழக்கங்களை எழுப்பியவாறு பக்தா்கள் தேரை இழுத்துச் சென்றனா்.

விழாவில், கூத்தப்பாடி, மடம், கே.அக்ரஹாரம், அளேபுரம், கே.குள்ளாத்திரம்பட்டி, புதூா், மல்லாபுரம், பொச்சாரம்பட்டி மற்றும் பென்னாகரம் பகுதிகளில் இருந்து சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா். சுமாா் 30-க்கும் மேற்பட்ட போலீஸாா் மற்றும் ஊா்க்காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

மின் வேலியில் சிக்கி இளைஞா் பலியான விவகாரம்: விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை

தருமபுரி அருகே மின் வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், மின் வேலி அமைத்த விவசாயிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. தருமபுரி மாவட்டம், ஜோலி கோட்டை, கோம்பை கி... மேலும் பார்க்க

பாப்பாரப்பட்டியில் மக்கள் சந்திப்பு பிரசாரம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மக்கள் சந்திப்பு பிரசார பயணமானது பாப்பாரப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பகுதியில் நடைபொ்ற மக்கள் சந்திப்பு பிரசார பயணத... மேலும் பார்க்க

தருமபுரியில் குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு

குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. குழந்தை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வ... மேலும் பார்க்க

உயிரிழந்த பாம்புடன் வந்து இடையூறு: இளைஞா் மீது வழக்கு

தருமபுரி நகரில் உயிரிழந்த பாம்புடன் வந்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த இளைஞா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தருமபுரி நகரில் நான்குமுனைச் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மதுக் க... மேலும் பார்க்க

இழப்பீடு கோரி மா விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மா சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் வேலைவாய்ப்பு பயிற்சி பெற அழைப்பு

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு தாட்கோ மூலம் திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித... மேலும் பார்க்க