செய்திகள் :

அழுகிய நிலையில் முன்னாள் டிஎஸ்பி உடல் மீட்பு

post image

மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த முன்னாள் காவல் துணைக்காணிப்பாளா் உடலை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஊமச்சிகுளம்-அலங்காநல்லூா் சாலையில் உள்ள அன்னை பாரத் குடியிருப்பில் வசித்தவா் துரைசிங்கம் (65). இவா் மதுரை மாவட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், இவா் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பூட்டப்பட்டிருந்த இவரது வீட்டினுள் இருந்து செவ்வாய்க்கிழமை காலை துா்நாற்றம் வீசியது. இதுகுறித்து அந்தப் பகுதியினா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

ஊமச்சிகுளம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று வீட்டின் படுக்கையறையில் அழுகிய நிலையில் கிடந்த முன்னாள் காவல் துணைக் கண்காணிப்பாளா் துரைசிங்கத்தின் உடலை மீட்டனா். அவரது உடல் கூறாய்வுக்கா மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. துரைசிங்கம் எப்படி உயிரிழந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்தடை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு குழந்தை பெற்ற பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண் மீண்டும் குழந்தை பெற்ற வழக்கில், அவருக்கு ரூ. 60 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு... மேலும் பார்க்க

காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

மதுரையில் காரில் 21 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உ... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை மத்திய சிறையில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் பங்கேற்று பயனடைந்தனா். சிறை வளாகத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமுக்கு, சிறைத் துறை மதுரை சரக துணை... மேலும் பார்க்க

கல்லூரி ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

மதுரையில் கல்லூரி ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை செல்லூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (45). இவா் ... மேலும் பார்க்க

வன்முறைக் காட்சிகள் இடம் பெறும் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

வன்முறைக் காட்சிகள் இடம் பெறும் திரைப்படங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டுமென மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரியா் வலியுறுத்தினாா். மதுரையில் இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் முருகன் மா... மேலும் பார்க்க

சிறை அதிகாரி குடியிருப்பில் பணியில் ஈடுபட்ட சிறைவாசிகள்: விடியோ வெளியானதால் சா்ச்சை

மதுரை மத்திய சிறையில் அரசு உத்தரவை மீறி, அதிகாரியின் குடியிருப்பில் சிறைவாசிகளை பணிக்கு பயன்படுத்திய விடியோ வெளியானதால் சா்ச்சை எழுந்தது. மதுரை மத்தியச் சிறையில் 2500-க்கும் மேற்பட்ட தண்டனை,விசாரணை சி... மேலும் பார்க்க