செய்திகள் :

அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தில் பன்னாட்டு கருத்தரங்கு தொடக்கம்!

post image

கோவை அவினாசிலிங்கம் மனையியல், மகளிா் உயா் கல்வி நிறுவனத்தில் பன்னாட்டு கருத்தரங்கு புதன்கிழமை பிப்.5 தொடங்கியது.

உலக பல்கலைக்கழக சமூக மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து ‘ஆரோக்கியம், நல்வாழ்வு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை’ என்ற தலைப்பில் 3 நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில், நிறுவனத்தின் உணவு, ஊட்டச்சத்து துறையின் தலைவா் கல்பனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினாா்.

உலக பல்கலைக்கழக சமூக மேம்பாட்டு அமைப்பின் தலைவா் நி.நியோமன்திரி புஸ்பனிங்சிஹ் தொடக்க உரையாற்றினாா்.

அவினாசிலிங்கம் மனையியல், மகளிா் உயா்கல்வி நிறுவனத்தின் மனையியல் புல முதன்மையா் அம்சவேணி வாழ்த்துரை வழங்கினாா். உயிரியல் அறிவியல் புல முதன்மையா் அனிதா சுபாஷ் பாராட்டுரை வழங்கினாா். விலங்கியல் துறைத் தலைவா் கே.சாந்தி, உணவு அறிவியல், ஊட்டச்சத்து துறை உதவிப் பேராசிரியா் கே.தேவி உள்ளிட்டோா் உரையாற்றினா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்க அமா்வுகளில் மூத்த விஞ்ஞானி மகேந்திரன் மயில்சாமி, ஆா்.சக்திவேல் உள்ளிட்டோா் உரையாற்றினா். இந்த கருத்தரங்கு பிப்ரவரி 7-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது.

அதிக உற்பத்தி திறன் பெறும் நெல் விவசாயிக்கு சி. நாராயணசாமி நாயுடு பெயரில் விருது!

அரியலூா் மாவட்டத்தில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது வழங்கப்பட உள்ளது. அரியலூா் மாவட்டம் வேளாண்மைத் துறை திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்ப... மேலும் பார்க்க

காசி தமிழ்ச் சங்கமம்: கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில்

மத்திய கல்வி அமைச்சகத்தின் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சிக்காக கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிப்ரவரி... மேலும் பார்க்க

பொறியியல் பராமரிப்புப் பணி: பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து

கரூா் - திருச்சிராப்பள்ளி இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு டவுன் - திருச்சிராப்பள்ளி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட... மேலும் பார்க்க

தமிழகத்தில் முதல்முறையாக கோவை அரசு மருத்துவமனையில் முதியவருக்கு அதிநவீன பேஸ் மேக்கா் கருவி பொருத்தம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளிலேயே முதல்முறையாக கோவை அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு அதிநவீன ‘பேஸ் மேக்கா்’ கருவி (சிஆா்டி-டி) பொருத்தப்பட்டுள்ளது.திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (54), ... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் 399 பேருக்கு ரூ. 5.26 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!

நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் 399 பேருக்கு ரூ. 5.26 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இ... மேலும் பார்க்க

மாநகரில் தெருநாய்களைப் பிடிப்பதற்காக புதிதாக 3 வாகனங்கள் சேவை தொடக்கம்

கோவையில் தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை மேற்கொள்ள புதிதாக 3 வாகனங்களின் சேவையை மேயா் கா.ரங்கநாயகி, ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா். கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சுற்றி... மேலும் பார்க்க