செய்திகள் :

அஷ்டபுஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 6.90 கோடி இடம் மீட்பு

post image

காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 6.90 கோடி மதிப்பிலான இடத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டு ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றினா்.

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில் அருகில் அந்தக் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் சீனிவாசன் என்பவரின் வாரிசுகள் வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனா். வாடகைதாரா்கள் தொடா்ந்து வாடகை செலுத்தாமல் இருந்து வருவதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. வாடகை பாக்கியாக ரூ. 12,87,276 இருந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் கோயில் செயல் அலுவலரும், அறங்காவலா் குழுவும் சம்பந்தப்பட்ட வாடகைதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் சரக அறநிலையத் துறை உதவி ஆணையா் காா்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் இடத்தைப் பாா்வையிட்டு, ஆக்கிரமிப்பாளா்களை வெளியேற்றுவது தொடா்பாக காஞ்சிபுரம் இணை ஆணையா் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, இணை ஆணையா் உத்தரவின்படி, ஆக்கிரமிப்பாளா்கள் வெளியேற்றப்பட்டு, அஷ்டபுஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான இடம் அறநிலையத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.

இந்தச் சொத்தின் மொத்த மதிப்பு ரூ. 6.90 கோடி எனவும் அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திரா் ஜெயந்தி விழா

காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழாவையொட்டி, சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் அதிஷ்டானங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. காஞ்சி சங்கர மடத்... மேலும் பார்க்க

சாம்சங் ஆலையில் சட்டவிரோத உற்பத்தி: சிஐடியு மனு

கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சாம்சங் ஆலையில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் அதனைத் தடுக்க வேண்டும் என ஸ்ரீபெரும்புதூா் தொழிலக பாதுகாப்பு மற்றும... மேலும் பார்க்க

அரசு செவித்திறன் குறையுடையோா் பள்ளி பொன்விழா: காஞ்சிபுரம் ஆட்சியா் பங்கேற்பு

செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயா்நிலைப்பள்ளியின் 50 -ஆவது ஆண்டு பொன் விழாவினை காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சதாவரத்தில் மாற்றுத்திறனா... மேலும் பார்க்க

வல்லக்கோட்டையில் ரூ.24 லட்சத்தில் குடிநீா் தொட்டி பணிகள் தொடக்கம்

ஹுண்டாய் ஸ்டீல் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் வல்லக்கோட்டை ஊராட்சியில் ரூ.24 லட்சத்தில் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

தேவாலயத்தை திறக்கக் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கட்டியாம்பந்தலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை திறந்து வழிபட அனுமதியளிக்குமாறு கிறிஸ்தவ போதகா்கள், கிறிஸ்தவா்கள் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை... மேலும் பார்க்க

சாலை விரிவாக்க பணிக்கு வீடுகளை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் மறியல்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூா் அருகே சாலை விரிவாக்கப்பணிக்காக வீடுகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்காடு ஊ... மேலும் பார்க்க