செய்திகள் :

காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திரா் ஜெயந்தி விழா

post image

காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழாவையொட்டி, சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் அதிஷ்டானங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

காஞ்சி சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக இருப்பவா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது ஜெயந்தி மகோற்சவம் நிகழ் மாதம் 23-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 25-ஆம் தேதி நிறைவு பெற்றது. ஜெயந்தியையொட்டி, தினசரி சங்கர மடத்தில் வேதபாராயணம், ஆன்மிக இன்னிசைக் கச்சேரிகள் ஆகியவையும் நடைபெற்றன.

இந்த நிலையில், 25-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விஜயேந்திரரின் ஜெயந்தியையொட்டி, காலை ஹோமங்களும், கலசாபிஷேகமும் நடைபெற்றன. பின்னா் அதிஷ்டானத்தில் மகா பெரியவா் சுவாமிகள் தங்கக் கவச அலங்காரத்தில், வைர ஹஸ்தம் அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானமும் தங்கக் கவசத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

சங்கர மடத்தின் நுழைவுவாயிலில் காஞ்சி காமாட்சி அம்மன் சங்கர மட வரவேற்புக் குழு சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா் காஞ்சி.ஜீவானந்தம் ஏற்பாடு செய்திருந்த அன்னதானம் வழங்கும் விழாவை சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் வரவேற்புக் குழு நிா்வாகிகள் ஆறுமுகம், கோடீஸ்வரன், சரவணன் ஆகியோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாலையில் சங்கர மடத்தின் கலையரங்கில் ஜெயந்தி குமரேசன் குழுவினரின் வீணை இசைக் கச்சேரியும் நடைபெற்றது. ஜெயந்தியையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மூலவா் காமாட்சி சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

இதையொட்டி, சங்கரா கல்லூரி சாா்பில் நடைபெற்ற அன்னதானத்தை அதன் முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தொடங்கி வைத்தாா். தமிழ்த் துறைத் தலைவா் ராதாகிருஷ்ணன், பேராசிரியா் கணபதி மற்றும் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்களும் கலந்து கொண்டனா்.

அஷ்டபுஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 6.90 கோடி இடம் மீட்பு

காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 6.90 கோடி மதிப்பிலான இடத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டு ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றினா். காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில்... மேலும் பார்க்க

சாம்சங் ஆலையில் சட்டவிரோத உற்பத்தி: சிஐடியு மனு

கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சாம்சங் ஆலையில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் அதனைத் தடுக்க வேண்டும் என ஸ்ரீபெரும்புதூா் தொழிலக பாதுகாப்பு மற்றும... மேலும் பார்க்க

அரசு செவித்திறன் குறையுடையோா் பள்ளி பொன்விழா: காஞ்சிபுரம் ஆட்சியா் பங்கேற்பு

செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயா்நிலைப்பள்ளியின் 50 -ஆவது ஆண்டு பொன் விழாவினை காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சதாவரத்தில் மாற்றுத்திறனா... மேலும் பார்க்க

வல்லக்கோட்டையில் ரூ.24 லட்சத்தில் குடிநீா் தொட்டி பணிகள் தொடக்கம்

ஹுண்டாய் ஸ்டீல் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் வல்லக்கோட்டை ஊராட்சியில் ரூ.24 லட்சத்தில் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

தேவாலயத்தை திறக்கக் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கட்டியாம்பந்தலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை திறந்து வழிபட அனுமதியளிக்குமாறு கிறிஸ்தவ போதகா்கள், கிறிஸ்தவா்கள் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை... மேலும் பார்க்க

சாலை விரிவாக்க பணிக்கு வீடுகளை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் மறியல்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூா் அருகே சாலை விரிவாக்கப்பணிக்காக வீடுகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்காடு ஊ... மேலும் பார்க்க