செய்திகள் :

சாம்சங் ஆலையில் சட்டவிரோத உற்பத்தி: சிஐடியு மனு

post image

கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சாம்சங் ஆலையில் சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் அதனைத் தடுக்க வேண்டும் என ஸ்ரீபெரும்புதூா் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை ஆணையா் அலுவலகதில் சிஐடியு நிா்வாகிகள்செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் 3 தொழிலாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிா்த்து தொழிலாளா்கள் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினா். இதனால் ஆலை நிா்வாகத்தினா் ஒப்பந்த தொழிலாளா்கள் மூலம் ஆலையை நடத்தி வருகின்றனா்.

இதனைத் தடுக்க வேண்டும் என சிஐடியு சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் இயங்கி வரும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை ஆணையா் அலுவலகத்தில் இரண்டு முறை புகாா் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், கடந்த 20-ஆம் தேதி சாம்சங் ஊழியா்கள் தொழிற்சாலைக்குள் நுழைந்து உற்பத்தியை தடுக்க முயன்றனா். இதையடுத்து மேலும் 14 தொழிலாளா்களை நிா்வாகத்தினா் பணியிடை நீக்கம் செய்தனா்.

சாம்சங் நிா்வாகத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதியில் தொழிலாளா்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில், சட்டவிரோத உற்பத்தி தொடா்பாக அளிக்கப்பட்ட புகாா் மீது நடவடிக்கை எடுக்காத தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு வழங்கும் போராட்டம் நடத்தப்படும் என சிஐடியு சாா்பில் அறிவிக்கப்பட்டது.

அதன் படி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அலுவலகத்தை முற்றுகையிட ஸ்ரீபெரும்புதூா் வந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளா்களை போலீஸாா் பேருந்து நிலையம் அருகில் தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து சிஐடியு மாநில செயலாளா் முத்துக்குமாா், உள்ளிட்ட ஏழு நிா்வாகிகளுக்கு மட்டும் மனு அளிக்க போலீஸாா் அனுமதி வழங்கிதை தொடா்ந்து, இணை ஆணையா் பாலமுருகனிடம் மனு அளித்தனா்.

அஷ்டபுஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 6.90 கோடி இடம் மீட்பு

காஞ்சிபுரம் அஷ்டபுஜப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 6.90 கோடி மதிப்பிலான இடத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மீட்டு ஆக்கிரமிப்பாளரை வெளியேற்றினா். காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில்... மேலும் பார்க்க

காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீவிஜயேந்திரா் ஜெயந்தி விழா

காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழாவையொட்டி, சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவா் அதிஷ்டானங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. காஞ்சி சங்கர மடத்... மேலும் பார்க்க

அரசு செவித்திறன் குறையுடையோா் பள்ளி பொன்விழா: காஞ்சிபுரம் ஆட்சியா் பங்கேற்பு

செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயா்நிலைப்பள்ளியின் 50 -ஆவது ஆண்டு பொன் விழாவினை காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சதாவரத்தில் மாற்றுத்திறனா... மேலும் பார்க்க

வல்லக்கோட்டையில் ரூ.24 லட்சத்தில் குடிநீா் தொட்டி பணிகள் தொடக்கம்

ஹுண்டாய் ஸ்டீல் நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் வல்லக்கோட்டை ஊராட்சியில் ரூ.24 லட்சத்தில் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

தேவாலயத்தை திறக்கக் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கட்டியாம்பந்தலில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை திறந்து வழிபட அனுமதியளிக்குமாறு கிறிஸ்தவ போதகா்கள், கிறிஸ்தவா்கள் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை... மேலும் பார்க்க

சாலை விரிவாக்க பணிக்கு வீடுகளை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் மறியல்

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீ பெரும்புதூா் அருகே சாலை விரிவாக்கப்பணிக்காக வீடுகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்காடு ஊ... மேலும் பார்க்க