செய்திகள் :

ஆக.1 முதல் கனடா பொருள்களுக்கு 35% வரி அமல்! - டிரம்ப் அதிரடி அறிவிப்பு

post image

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனடா பொருள்களுக்கு 35 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறார். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு அதிக இறக்குமதி விதித்து டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாத அனைத்து நாடுகளுக்கும் 15 அல்லது 20 சதவிகிதம் மட்டுமே வரி விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், திடீரென வரிவிதிப்புகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதில், கனடாவுக்கு 35 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த வரிவிதிப்புகளை கனடா ஏற்றுக்கொள்ளாமல் வரி அதிகரிப்பு நடவடிக்கைகளை எடுத்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மேலும், கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு சமூக வலைதளப் பக்கமான ட்ரூத் சோஷியலில் டிரம்ப் எழுதியுள்ள கடிதத்தில், “அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுப்பதில் கனடாவின் தோல்வியடைந்துவிட்டது” என்றும் விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில், பிரேசில், இலங்கை, அல்ஜீரியா, புரூணே, இராக், லிபியா, மால்டோவா மற்றும் பிலிப்பின்ஸ் உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிவிதிப்புக்கான கடிதங்களை வெளியிட்டுள்ளார். இதில், அதிகபட்சமாக பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி கட்டண விகிதங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், அல்ஜீரியா, இலங்கை மற்றும் இராக் ஆகிய நாடுகளுக்கு 30 சதவிகித வரியும், புரூணே, லிபியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளுக்கு 25 சதவிகிதமும், பிலிப்பின்ஸுக்கு 20 சதவிகிதமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, அமெரிக்கா இலங்கையுடன் 2.6 பில்லியன் டாலர், அல்ஜீரியாவுடன் 1.4 பில்லியன் டாலர், இராக்குடன் 5.9 பில்லியன் டாலர், லிபியாவுடன் 900 மில்லியன் டாலர், பிலிப்பின்ஸுடன் 4.9 பில்லியன் டாலர், புரூணேயுடன் 111 மில்லியன் டாலர் மற்றும் மால்டோவாவுடன் 85 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருள்களின் மீது வர்த்தக ஏற்றத்தாழ்வைக் கொண்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஏழு நாடுகளுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் மட்டுமே, 30 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட அமெரிக்கப் பொருளாதாரத்தில் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Donald Trump says Canada to face 35 percent tariff rate starting August 1

இதையும் படிக்க :நாசாவில் உயர்பொறுப்பில் உள்ள 2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய டிரம்ப் அரசு முடிவு!

கனடா பொருள்கள் மீது 35% கூடுதல் வரி

ஆகஸ்ட் 1 முதல் கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், பிற வா்த்தகக் கூட்டணி நாடுகளுக்கு 15 அல்லது 20 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட... மேலும் பார்க்க

9 பயணிகளை சுட்டுக் கொன்ற பலூச் பயங்கரவாதிகள்

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்த 9 பயணிகளை பலூச் பயங்கரவாதிகள் பேருந்துகளில் இருந்து இறக்கி சுட்டுக் கொன்றனா். இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூ... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 121-ஆக உயா்வு

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 121-ஆக உயா்ந்துள்ளது. அந்த மாகாணத்தின் மத்தியப் பகுதி முழுவதும் தொடா்ந்து பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில... மேலும் பார்க்க

காஸா: மே 27 முதல் உணவுக்காகக் காத்திருந்த 800 பேர் கொலை! ஐ.நா. அறிவிப்பு!

காஸாவில், கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகளைப் பெற முயன்று சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் சபை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது.காஸாவில் கடந்த மே மாதத்தின... மேலும் பார்க்க

மியான்மரில் புத்த மடத்தின் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்? 23 பேர் கொலை!

மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சகாயிங் மாகாணத்த... மேலும் பார்க்க

கடலில் மூழ்கும் ஜப்பானின் கன்சாய் விமான நிலையம்!

ஜப்பானின், ஒசாகா கடலில் அமைக்கப்பட்டிருந்த கன்சாய் சர்வதேச விமான நிலையம், இதுவரை பொறியியல் துறையின் அதிசயமாகப் பார்க்கப்பட்டு வந்த நிலையில், அது மூழ்கிக் கொண்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.கடல் பரப்... மேலும் பார்க்க