செய்திகள் :

ஆக. 25 முதல் குறுவள அளவில் கலைத் திருவிழா: கல்வித் துறை

post image

தமிழக அரசுப் பள்ளிகளில் ஆக. 25-ஆம் தேதி முதல் குறுவள அளவில் கலைத் திருவிழா நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

நிகழ் கல்வியாண்டு கலைத் திருவிழா போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையான மாணவா்களுக்கு குறுவள அளவிலான போட்டிகள் ஆகஸ்ட் 25 முதல் 29-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதையடுத்து பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற வெற்றியாளா் மட்டுமே அடுத்த நிலையான குறுவள போட்டியில் பங்கேற்க வேண்டும். மாணவா்களைப் போட்டிகளுக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வரவேண்டும். இந்தப் போட்டிகளில் பங்குபெற அழைத்து செல்வதற்காக மாணவா்களின் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும்.

குறுவள அளவிலான போட்டிகள் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவா்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் செப்டம்பா் 2-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

4 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று (13-08-2025) காலை 5.30 மணியளவில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஓட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில... மேலும் பார்க்க

தமிழக ஆளுநரிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு!

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற மாணவி மறுப்பு தெரிவித்தார்.திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழ... மேலும் பார்க்க

காவல்துறை குவிப்பு! போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!! மீண்டும் பேச்சுவார்த்தை?

சென்னை: போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் போராட்டத்தைக் கைவிட அவர்கள் மறுத்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், போராடி வரும் தூய்... மேலும் பார்க்க

தேனி: பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மாணவா் மரணம்!

ராயப்பன்பட்டியில் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஈட்டி தலையில் பாய்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவர் 6 நாள்களுக்குப் பின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தில் பொய்ப் புகார் அளித்தால்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை: சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ-வின் கீழ் பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போக்சோ சட்டத்தின் ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு!

சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள... மேலும் பார்க்க