செய்திகள் :

ஆக. 28 ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி: ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் முதல்முறையாக இருதரப்பு பேச்சு!

post image

ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் பிரதமர் மோடி முதல்முறையாக இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றபின், எட்டாவது முறையாக ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணம் செல்கிறார்.

இந்த நிலையில், ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவுடன் முதல்முறையாக இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.

இது குறித்து வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி இன்று (ஆக. 26) செய்தியாளர்களுடன் பேசும்போது, ஆக. 28-ஆம் தேதி மாலை பிரதமர் மோடி ஜப்பானுக்கு புறப்படுவதாக குறிப்பிட்டார். ஆக. 29, 30 ஆகிய இரு நாள்கள் ஜப்பானில் இருக்கும் அவர், 15-ஆவது முறையாகக் கூடும் இந்தியா - ஜப்பான் இருதரப்பு வருடாந்திர மாநாட்டில் பங்கேற்கிறார்.

இந்த சந்திப்புன்போது இரு தலைவர்களும் இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

ஜப்பானைத் தொடர்ந்து, ஆக. 31 அங்கிருந்து சீனா செல்லும் பிரதமர் மோடி செப். 1 வரை சீனாவில் இருப்பார். அங்கு டியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்புஅமைப்பு மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டின்போது இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் அவர் பிற நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் ஈடுபட உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PM Modi to hold talks for first time with Japan's Ishiba

பிகாரில் வெற்றி, தோல்வி அடைந்த தொகுதிகளைப் பிரித்து 243 தொகுதிகளிலும் பாஜக ஆலோசனைக் கூட்டம்!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்.டி.ஏ.) ஆகஸ்ட்டில் தொடங்கிவிட்டது. பிகாரில் அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்ப... மேலும் பார்க்க

திவால் வழக்கில் நீதிபதி விலகல்: ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிடுமாறு அழுத்தம் வந்ததாகப் புகார்!

தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வைச் சேர்ந்த நீதிபதி சரத் குமார் ஷர்மா, ஒரு திவால் வழக்கை விசாரிப்பதிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளார்.ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிடக்... மேலும் பார்க்க

மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவனுக்கு ஜாமீன் நிராகரிப்பு!

மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவனுக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.கட்டிய மனைவியை துப்பாக்கியால் சுட்டதை நியாயப்படுத்துவதற்காக எந்தக் காரணத்தை கணவன் விளக்கினாலும் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாதென தில்லி... மேலும் பார்க்க

மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்தா

தலைநகர் தில்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்கவேண்டும் என்று தில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.சர்தார் படேல் வித்யாலயாவில் மாணவர்களுக்கான மின்சாரப் பேருந்துகள... மேலும் பார்க்க

சிஆர்பிஎஃப், ராணுவ, மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்த பாகிஸ்தான் உளவாளி: தகவல்கள்

ரகசிய தகவல்களைப் பெறுவதற்காக, சிஆர்பிஎஃப் உதவி துணை-ஆய்வாளர் மோதி ராம் ஜத் உடன் தொடர்பிலிருந்த பாகிஸ்தான் உளவாளியிடம் இந்திய ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையுடன் தொடர்புடைய மேலும் 15 பேரின் தொலைபேசி எ... மேலும் பார்க்க

காங்கிரஸ்காரனாகதான் இறப்பேன்! ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்கு மன்னிப்புக் கோரினார் சிவக்குமார்!

கர்நாடக சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்காக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும் துணை முதல்வருமான டி.கே. சிவக்குமார் மன்னிப்புக் கோரியுள்ளார்.கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பேச... மேலும் பார்க்க