செய்திகள் :

மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவனுக்கு ஜாமீன் நிராகரிப்பு!

post image

மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவனுக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கட்டிய மனைவியை துப்பாக்கியால் சுட்டதை நியாயப்படுத்துவதற்காக எந்தக் காரணத்தை கணவன் விளக்கினாலும் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாதென தில்லி உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

கடந்த 2018-இல், தில்லியிலுள்ள ஒரு மருத்துவமனை வெளியே குடும்பத் தகராறில் தன்னுடன் இணக்கமாக வர மறுத்த மனைவியின் வயிற்றில் துப்பாக்கியால் சுட்ட கணவன் கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமீன் மனு இன்று(ஆக. 26) தில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனு மீதான விசாரணையில், அந்த நபர் கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு அந்தப் பெண்னை சுட்டதாக வாதிடப்பட்டது. அந்தப் பெண்ணை கொல்லும் உள்நோக்கத்துடன் செயல்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனை நிராகரித்து வாதிட்ட அந்தப் பெண்னின் தரப்பு, அந்த நபர் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் இருப்பதைச் சுட்டிக்காட்டியது. உரிமமின்றி அவர் துப்பாக்கி வாங்கி பயன்படுத்தியதையும் சாட்சியங்களுடன் விளக்கியது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததுடன், வழக்கை விசாரிக்கும் கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கில் இதுவரை கடந்த 6 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அந்த நபர் மீதான விசாரணையை 6 மாதங்களில் முடிக்கவும் அறிவுறுத்தியது.

cannot justify violence, says Delhi HC while denying bail to man accused of shooting wife

பிகாரில் வெற்றி, தோல்வி அடைந்த தொகுதிகளைப் பிரித்து 243 தொகுதிகளிலும் பாஜக ஆலோசனைக் கூட்டம்!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்.டி.ஏ.) ஆகஸ்ட்டில் தொடங்கிவிட்டது. பிகாரில் அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்ப... மேலும் பார்க்க

திவால் வழக்கில் நீதிபதி விலகல்: ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிடுமாறு அழுத்தம் வந்ததாகப் புகார்!

தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வைச் சேர்ந்த நீதிபதி சரத் குமார் ஷர்மா, ஒரு திவால் வழக்கை விசாரிப்பதிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளார்.ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிடக்... மேலும் பார்க்க

ஆக. 28 ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி: ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் முதல்முறையாக இருதரப்பு பேச்சு!

ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் பிரதமர் மோடி முதல்முறையாக இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றபின், எட்டாவது முறையாக ஜப்பானுக்கு அரசுமுறைப் பயணம் செல்கிறார்.... மேலும் பார்க்க

மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்தா

தலைநகர் தில்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்கவேண்டும் என்று தில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.சர்தார் படேல் வித்யாலயாவில் மாணவர்களுக்கான மின்சாரப் பேருந்துகள... மேலும் பார்க்க

சிஆர்பிஎஃப், ராணுவ, மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்த பாகிஸ்தான் உளவாளி: தகவல்கள்

ரகசிய தகவல்களைப் பெறுவதற்காக, சிஆர்பிஎஃப் உதவி துணை-ஆய்வாளர் மோதி ராம் ஜத் உடன் தொடர்பிலிருந்த பாகிஸ்தான் உளவாளியிடம் இந்திய ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையுடன் தொடர்புடைய மேலும் 15 பேரின் தொலைபேசி எ... மேலும் பார்க்க

காங்கிரஸ்காரனாகதான் இறப்பேன்! ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்கு மன்னிப்புக் கோரினார் சிவக்குமார்!

கர்நாடக சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்காக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரும் துணை முதல்வருமான டி.கே. சிவக்குமார் மன்னிப்புக் கோரியுள்ளார்.கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பேச... மேலும் பார்க்க