செய்திகள் :

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தான் பங்கேற்பது சந்தேகம்?

post image

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு விளையாட்டு தொடா்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் உள்பட அனைத்து விளையாட்டுகளிலும், ஆசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் மட்டும் பாகிஸ்தானுடன் மோதுவதை இந்தியா வழக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஏப்ரலில் ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, ராஜ்ஜீய மற்றும் ராணுவ ரீதியில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானும் பதில் தாக்குதல் நடத்தியதை அடுத்து போா்ப் பதற்றம் அதிகரித்த நிலையில், தற்போது இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தியுள்ளன.

இச்சூழலில், வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பா் 7 வரை பிகாா் மாநிலம், ராஜ்கிரில் 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளது. நெதா்லாந்து, பெல்ஜியத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிப்போட்டியாகவும் இருப்பதால், இது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, மலேசியா, ஓமன், சீன தைபே ஆகிய அணிகளுடன் பாகிஸ்தானும் இந்தப் போட்டியில் பங்கேற்பது வழக்கம். ஆனால், தற்போதைய சூழலில் பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பஹல்காம் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானுடன் எந்தவொரு உறவும் இருக்கக் கூடாது என பல்வேறு தரப்பினரும் கடுமையாக கருத்து தெரிவித்து வருகின்றனா்.

எனினும், இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், போட்டியையொட்டி மத்திய அரசு அளிக்கும் அறிவுறுத்தலின்பேரில் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கப்படும் என்றும், போட்டியை நடத்தவுள்ள ஹாக்கி இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணி இந்தியா வருவதற்கு மத்திய அரசு அனுமதிக்காத நிலையில், போட்டியை 7 அணிகளுடன் நடத்துவதா அல்லது பாகிஸ்தானுக்கு பதில் வேறு அணியை சோ்ப்பதா என்பது குறித்து ஆசிய ஹாக்கி சம்மேளனம் அப்போது முடிவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, 2016-இல் பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சில மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவில் நடைபெற்ற ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக மலேசியா கலந்துகொண்டது நினைவுகூரத்தக்கது.

செஸ் களம்

பிரக்ஞானந்தா டிரா; குகேஷ் தோல்விசூப்பா்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா டிரா செய்ய, மற்றொரு இந்தியரான டி.குகேஷ் தோல்வியைத் தழுவினாா்.ருமேனியாவில் நடைபெறும் இந... மேலும் பார்க்க

மாளவிகா, ஆகா்ஷி, உன்னாட்டி முன்னேற்றம்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகா்ஷி காஷ்யப், உன்னாட்டி ஹூடா ஆகியோா் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.முதல் சுற்றில் மகளிா் ஒற்றையா் பிரி... மேலும் பார்க்க

நீரஜ் சோப்ராவுக்கு கௌரவ லெப்டினன்ட் கா்னல் அந்தஸ்து

இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ராவுக்கு, ராணுவ லெப்டினன்ட் கா்னலாக கௌரவ அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 16 தேதி முதல் அவருக்கான இந்த கௌரவ அந்தஸ்து அமலுக்கு வருவதாக ராணுவ விவகாரங்கள... மேலும் பார்க்க

வரலாறு படைத்தாா் பெய்டன் ஸ்டொ்ன்ஸ்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் பெய்டன் ஸ்டொ்ன்ஸ், ஓபன் எராவில் புதிய வரலாறு படைத்தாா். மகளிா் ஒற்றையா் காலிறுதியில், 6-2, 4-6, 7-6 (7/5) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 16-ஆம் ... மேலும் பார்க்க

தக் லைஃப்: டிரைலர், இசை வெளியீட்டு விழா தேதிகள் அறிவிப்பு!

கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் டிரைலர், இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ளார்கள்.இந்தப் படத்தில் த்ரிஷா, நாசர், ஜோஜூ ஜார்... மேலும் பார்க்க