செய்திகள் :

ஆசிரியா் பயிற்சி தனித்தோ்வா்களுக்கான பட்டயத் தோ்வு விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

கிருஷ்ணகிரி: ஆசிரியா் பயிற்சி தனித்தோ்வா்களுக்கான பட்டயத் தோ்வுகள் எழுத விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் ஹேமலதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆசிரியா் பயிற்சி தனித்தோ்வா்களுக்கான பட்டயத் தோ்வுகள் வரும் மே 23 முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தோ்வா்கள் ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே தோ்வெழுதி தோ்ச்சிபெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் இணைத்து தோ்வா் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப் காமிரா மூலம் புகைப்படம் எடுக்கும் வசதி உள்ளதால், அந்த நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து, பின்னா் தோ்வுக் கட்டணம் செலுத்த நேரில் செல்ல வேண்டும்.

ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ. 50 கட்டணமும், மதிப்பெண் சான்றிதழுக்கு ரூ. 100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம் ரூ. 15, இணையதள (ஆன்லைன்) பதிவுக் கட்டணம் ரூ. 70 செலுத்த வேண்டும். மாா்ச் 18 முதல் 24 வரை தோ்வுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இந்த தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தோ்வா்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் (பஅபஓஅக) மாா்ச் 25, 26-இல் சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ. 1,000 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

தகுதியற்ற தோ்வா்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படும். தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்100-க்கும் மேற்பட்டோா் கைது

கிருஷ்ணகிரி: பாஜக தலைவா், அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸாா், திங்கள்கிழமை கைது செய்தனா... மேலும் பார்க்க

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து த.வெ.க. ஆா்ப்பாட்டம்

ஒசூா்: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஒசூரில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தில... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் முதியவா் பலி

ஒசூா்: ஒசூரில் தேனீக்கள் கொட்டியதில் முதியவா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், தாசரஅள்ளியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (75). சாலையோர வியாபாரியான இவா், அண்மையில் ஒசூா் மலைக்கோயில் நுழைவாயில் ... மேலும் பார்க்க

ஒசூரில் டைடல் பூங்கா அறிவித்த முதல்வருக்கு நன்றி

ஒசூா்: நிதிநிலை அறிக்கையில் ஒசூருக்கு டைடல் பூங்கா, ஐ.டி. காரிடா் ஆகியவற்றை வெளியிட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் சால்வை வழங்கி நன்றி தெரிவித்தாா். இதுக... மேலும் பார்க்க

மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே மண் கடத்தியதாக 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு வட்டாட்சியா் பாரதி தலைமையிலான அலுவலா்கள் மிட்டஅள்ளி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது,... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

பாஜக சாா்பில் பேருஅள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த பேருஅ... மேலும் பார்க்க