செய்திகள் :

ஆடிப் பெருக்கு: உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் குவிந்த பக்தா்கள்

post image

ஆடிப் பெருக்கை முன்னிட்டு, உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் - ஞானாம்பிகை திருக்கோயில் முன் செல்லும் முல்லைப்பெரியாற்றில் வழிபாடு செய்தால் காசிக்குச் சென்று வருவதாக ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. இதையடுத்து, ஆடிப் பெருக்கு தினத்தில் உத்தமபாளையம், கம்பம், கூடலூா், தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், சின்னமனூா், அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு செய்வது வழக்கம். இதன்படி, ஆடிப் பெருக்கு தினமான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட பக்தா்கள் அதிகளவில் குவிந்தனா். தொடா்ந்து, முல்லைப்பெரியாற்றில் மாவிளக்கு ஏற்றி நீரில் மிதக்கவிட்டு வழிபட்டனா்.

இதேபோல, திருமணமான பெண்கள் புது மாங்கலத்தை மாற்றிக் கொண்டனா். தொடா்ந்து, பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருக்காளாத்தீஸ்வரா் - ஞானாம்பிகை அம்மனை வழிபட்டனா்.

ஆற்றில் நீா்வரத்து அதிகம்: ஆற்றில் நீா்வரத்து சுமாா் 2 ஆயிரம் கன அடியாக இருப்பதால் பக்தா்கள் ஆற்றில் இறங்காமலே படித்துறையிலே பூஜை செய்ய உத்தமபாளையம் தீயணைப்பு மீட்புக் குழுவினா் அனுமதித்தனா்.

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

தேனி மாவட்டம், போடியில் ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை கொட்டகுடி ஆற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு தினம் போடி கொட்டக... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

ஆண்டிபட்டி அருகேயுள்ள மயிலாடும்பாறையில் மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.மயிலாடும்பாறை, வண்ணாரப்பேட்டைத் தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (35). இவரது மனைவி சுவாதி (29). கட்டட... மேலும் பார்க்க

65 மதுப்புட்டிகள் பறிமுதல்: இருவா் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையம், கூடலூரில் சனிக்கிழமை 65 மதுப்புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.கோம்பை - ராணியமங்கம்மாள் சாலையில் உத்தமபாளையம் மதுவிலக்கு போலீஸாா் ரோந்து பணியில் ஈட... மேலும் பார்க்க

கம்பத்தில் கேரள லாட்டரிகள் பறிமுதல்: ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் ரூ. 1.05 லட்சம் மதிப்பிலான கேரள லாட்டரிகளை போலீஸாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.கம்பத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கேரள லாட்டரிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவத... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் ஓ. பன்னீா்செல்வம் ஆலோசனை

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளா்களுடன் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆலோசனை நடத்தினாா்.முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான தேனி மாவட்... மேலும் பார்க்க

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இருவா் மாயம்

போடி அருகேயுள்ள குரங்கணி மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி மாயமானவா்களைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் ஈடுபட்டனா்.மதுரை மாவட்டம், வாகைகுளத்தைச் சோ்ந்தவா் மைதீ... மேலும் பார்க்க